தமிழ் அரங்கம்

Thursday, August 21, 2008

அம்பலமானது நாடாளுமன்ற போலி ஜனநாயகம் நாறிப்போனது சி.பி.எம்.இன் கோஷ்டி சண்டை

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, காங்கிரசு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை "இடதுசாரி' கூட்டணிக் கட்சிகள் விலக்கிக் கொண்டதில் யார் யாருக்கோ நெருக்கடிகள் இருந்தாலும், உண்மையான நெருக்கடி சி.பி.எம். கட்சிக்குள்தான் தற்போது மையம் கொண்டுள்ளது. அக்கட்சியின் சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல, நாடாளுமன்ற அவைத் தலைவரான சோமநாத் சட்டர்ஜியை கட்சியிலிருந்து நீக்கிய விவகாரத்தின் மூலம், அக்கட்சியில் நிலவும் கோஷ்டி சண்டையும் இப்போது சந்தி சிரிக்கத் தொடங்கியுள்ளது.

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை "இடதுசாரி' கூட்டணிக் கட்சிகள் கடந்த ஜூலை 8ஆம் தேதியன்று திரும்பப் பெற்றன. அதையொட்டி அரசுத் தலைவரிடம் கொடுத்த பட்டியலில் சி.பி.எம். கட்சி எம்.பி.க்களின் வரிசையில் நாடா ளுமன்ற அவைத் தலைவரான சோமநாத் சட்டர்ஜியின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இதையறிந்த சோமநாத் பொங்கியெழுந்து விட்டார். ""அவைத் தலைவரான நான் எல்லா கட்சிகளுக்கும் பொதுவானவன்; எனது பெயரை அந்தப் பட்டியலில் சேர்த்தது தவறு'' என்று சீறினார். மற்றவர்களால் ""மாண்புமிகு சபாநாயகர்'' என்று அழைக்கப்படும் தன் பெயரை ""தோழர்'' என்று பட்டியலில் சேர்த்து கட்சி தன்னை இழிவுபடுத்தியதைக் கண்டு சோமநாத்துக்கு மகாகோபமாம்!

No comments: