தமிழ் அரங்கம்

Friday, August 22, 2008

வன்னி மக்களை யுத்த இலக்கில் வைத்து அழிப்பதன் மூலம், யுத்தத்தை வெல்ல முனையும் புலியின் யுத்த தந்திரம்

உலகில் புலிகள் மட்டும் தான் இதை செய்யும் அளவுக்கு, மனவக்கிரத்தைக் கொண்டவர்கள். சொந்த மக்களையே யுத்த முனையில் நிறுத்தி, அவர்களை தமக்காக சண்டை செய் என்று நிர்ப்பந்திக்கின்ற புலி அரசியல் தான், புலிகள் சொல்லும் மக்கள் யுத்தம். மறுபக்கத்தில் பேரினவாதத்தின் பொதுவான அழித்தொழிப்பில் மக்களைக் குறிப்பான இலக்காக்கி, அதை வைத்துப் பிரச்சாரம் செய்ய முனையும் பிரச்சார யுத்தம்.

இப்படி புலிகள் தமது இறுதிக் காலத்தை எதிர்கொள்வது எப்படி என்று தெரியாது திணறுகின்றனர். கண்மூடித்தனமான பலாத்காரமான நடிவடிக்கைகள் ஊடாக, தமது சொந்த அழிவை மேலும் துரிதப்படுத்துகின்றனர். இப்படி மக்களை யுத்தமுனையில் நிறுத்தி, மக்கள் பயிற்சி, முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி என்று கூறிக்கொண்டு, வீங்கி வெம்பிய தமது சொந்தப் படங்களை வெளியிடுகின்றனர்.

அன்று அமைதி-சமாதானம் ஒப்பந்தத்தை மீற, யாழ்குடாவில் மக்கள் படையின் பெயரில் வீங்கி வெம்பிய புலிகள் நடத்திய தாக்குதல் தான், இன்று புலியின் சொந்த அழிவு வரை வந்து நிற்கின்றது. அந்த மக்கள் படையைச் சேர்ந்த புலிகள் தான், பெருமளவில் காணாமல் போனவர்களும, கொல்லப்பட்டவர்களுமாவர். இதனால் புலிகள் தாம் அல்லாத பிரதேசங்களில் காணாமல் போய்விட்டனர்............ முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: