தமிழ் அரங்கம்

Monday, September 8, 2008

காஷ்மீர் : இந்து தேசியத்தின் பரிதாபத் தோல்வி

நீறு பூத்த நெருப்பாக இருந்து வந்த காசுமீர் மக்களின் சுதந்திர வேட்கை மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. காசுமீர் பள்ளத்தாக்கில், ஆகஸ்டு மாதம் தொடங்கி நடைபெற்றுவரும் போராட்டங்களில்"சுதந்திர காசுமீர்'' என மக்கள் முழங்குகிறார்கள். ஆகஸ்டு 15 அன்று, காசுமீர் தலைநகர் சிறீநகரில் உள்ள லால் சௌக்கில் ஏற்றப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடியை, ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய ரிசர்வ் போலீசு படையைக் கொண்டே கீழே இறக்கி விட்டு, பாக். நாட்டின் தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர்.

இந்திய தேசியவாதிகள் அனைவரும் இதனைக் கண்டு ஆடிப் போய்க் கிடக்கிறார்கள். இந்திய இராணுவம், கடந்த பத்தாண்டுகளில் காசுமீரில் ஏற்படுத்தியிருந்த "அமைதி'யை, பிரிவினைவாதிகளும், சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் சீர்குலைத்துவிட்டதாக அதிகார வர்க்கம் குற்றஞ்சுமத்துகிறது. ஜாடியில் இருந்து வெளியே வந்துவிட்ட"சுதந்திர பூதத்தை'' மீண் டும் ஜாடிக்குள் எப்படி அடைப்பது என மைய அரசு தலையைப் பிய்த்துக் கொண்டு திரிகிறது.

எதிர்வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள காசுமீர் சட்டசபைத் தேர்தலில், ஜம்முவைச் சேர்ந்த இந்துக்களின் வாக்குகளை மொத்தமாக அள்ளிக் கொள்ளத் திட்டம் போட்ட காங்கிரசு மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி, வனத்துறைக்குச் சொந்தமான 39.88 ஹெக்டேர் நிலத்தை, அமர்நாத் ஆலய நிர்வாக வாரியம் அனுபவித்துக் கொள்ள அனுமதித்துச் சட்டம் போட்டது. இதற்கு எதிராக...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: