தமிழ் அரங்கம்

Saturday, September 13, 2008

தேசம்நெற் சூத்தையைக் கிண்டும், பேரினவாதக் குச்சிகள் : தனிமனித அவதூறு அரசியலை விட, மக்கள்விரோத அரசு சார்பு அரசியல் ஆபத்தானது.

புலிகளின் தோல்விகள் பேரினவாதத்தின் வெற்றியாக மாறுகின்றது. புதிய இந்த நிலைமை தான், புலம்பெயர் நாட்டிலும் பேரினவாத நிகழ்ச்சியாக அனைத்தும் மாறத் தொடங்கிவிட்டது. ஜனநாயகம், சுதந்திரம் என்பது புலியை அழித்தல், அதனிடத்தில் அரசை நிறுவுதல் என்பதாகத் தான், புலியல்லாத புலம் பெயர் அரசியல் புழுத்துவிட்டது. இதற்கு புலியெதிர்ப்பு என்பது, இனிமேல் ஒரு அடைமொழி தான். புலிக்கு எதிரான ஒவ்வொரு நிகழ்ச்சியும், அரசை எதிர்ப்பதில்லை அதை ஆதரிக்கின்றது. அரசை ஆதரிக்கின்ற கும்பல் இன்றி, புலம்பெயர் மாற்று என எதுவும் இன்று கிடையாது. எல்லாம் அதுவேயாகிவிட்டது.
இந்த அடிப்படையில் தான் 'அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல" என்ற அறிக்கையும் வெளிவந்துள்ளது. அரச எடுபிடிகளின், அதன் கைக் கூலித்தனத்தின் இழிவான இழிந்த பண்பு கெட்ட நடத்தைகளை பாதுகாக்க, இந்த அறிக்கை உதவும் என்று மனப்பால் குடிக்கின்றனர். தேசம்நெற் என்ற அவதூறு இணையத் தளத்தை கண்டிப்பதன் மூலம், தமது சொந்த மனித விரோத இழிசெயலை ஜனநாயகமானதாக காட்ட முனைகின்றனர்.

பேரினவாத அரச எடுபிடிகளாக, அரச கைக்கூலித்தனத்தையே அரசியலாக கொண்ட கொலைகாரக் கும்பலுடன் சேர்ந்து நடத்துகின்ற மக்கள் விரோத அரசியல் விபச்சாரத்தை, தேசம்நெற்றைக் கண்டிப்பதன் மூலம் நிமிர்த்த முனைகின்றனர்.

முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: