தமிழ் அரங்கம்

Tuesday, September 23, 2008

'அவர்களுக்கு நிலம் சொந்தமாய் இருந்தது!" ஆந்திராவில், சி.பொ.மண்டலத்தால் நிலத்தை விழந்துவிட்ட தாழ்த்தப்பட்ட விவசாயிகளின் போராட்ட வாழ்வு

அண்மையில் ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டத்தின் ஜட்செர்லா தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 13 விவசாயிகள் சுயேச்சைகளாகக் களமிறங்கினர். அவர்கள் தேர்தலில் நின்றது சட்டசபைக்குச் செல்வதற்கு அல்ல. சிறப்புப்பொருளாதார மண்டலம் எனும் பேரால் தங்கள் நிலம் பறிக்கப்பட்டதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யவே இத்தேர்தலில் நின்றனர். 8 ஆயிரத்துக்கும் மேல் வாக்குகளைப் பிரித்து இதற்கு முந்தைய தேர்தலில் வென்ற தெலுங்கானா ராஷ்டிர சமிதியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளியுள்ளனர்.

2003ஆம் ஆண்டில் "பசுமைப்பூங்கா' அமைப்பது என்ற பெயரில் நில அளவை ஆரம்பிக்கப்பட்டதும், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் திரண்டெழுந்து சாலைமறியல் செய்தனர். தலைநகர் வரை போராட்டத்தை எடுத்துச் சென்று சட்டசபை முன் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். 2005ஆம் ஆண்டில், "பசுமைப்பூங்கா' என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில், ஐதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் அரோபந்தோ பார்மா எனும் மருந்துக் கம்பெனிக்கான சிறப்புப் பொருளாதார மண்டலம் தொடங்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருக்கும் போலபள்ளி கிராம நிலத்தின் சந்தை மதிப்போ ரூ. 20 லட்சத்தும் மேல். ஆனால், இழப்பீடாக ஏக்கருக்கு வெறும் 18 ஆயிரம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதிலும் அதிகார வர்க்கம் மோசடி செய்து ............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: