தமிழ் அரங்கம்

Thursday, September 25, 2008

ஆந்திராக்ஸ் பீதி : அமெரிக்காவே குற்றவாளி!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்டதையடுத்த சில தினங்களில், "ஆந்த்ராக்ஸ்'' என்ற நச்சுக் கிருமியின் உயிர் அணுக்கள் தடவப்பட்ட கடிதங்கள், சில அமெரிக்க பத்திரிக்கை நிறுவனங்கள், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்களைக் குறி வைத்து அனுப்பப்பட்டன. மர்மமான முறையில் நடந்த புதிய வகையான இத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகளிடம் அணு ஆயுதம் இருப்பதாகக் கூறிவந்த அமெரிக்கக் கூலிப் பிரச்சாரக் கும்பல், ஆந்த்ராக்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள் தொடங்கியிருக்கும் உயிரியல் யுத்தம் எனப் பீதியூட்டின. ஈராக் மீது ஓர் ஆக்கிரமிப்புப் போரைத் தொடுக்க வேண்டும் எனத் திட்டம் போட்டுக் காத்திருந்த அமெரிக்க ஆளும் கும்பல், அமெரிக்க மக்களை மூளைச் சலவை செய்ய ஆந்த்ராக்ஸ் தாக்குதலையும் பயன்படுத்திக் கொண்டது.

ஆந்த்ராக்ஸ் கிருமி தடவப்பட்ட கடிதம் யார் வீட்டுக்கு வருமோ என்ற பீதி ஒருபுறமிருக்க, அமெரிக்க உளவு அமைப்பான "எஃப்.பி.ஐ.'' யார் வீட்டுக் கதவைத் தட்டுமோ என்ற அச்சத்திலும் அமெரிக்க மக்கள் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், எஃப்.பி.ஐ., வெள்ளைத் தோல் அல்லாத அந்நியர்களை மட்டுமல்ல, அமெரிக்க விஞ்ஞானிகளைக் கூட விட்டு வைக்காமல், விசாரணை நடத்தியது. உயிரியல் விஞ்ஞானிகள் அனைவரும் சந்தேகப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

No comments: