தமிழ் அரங்கம்

Wednesday, October 1, 2008

யாழ் மக்கள் சுபீட்சமோ, பேரினவாத 'ஜனநாயக"த்தில் கிடைக்கின்றதாம்!

ஜனநாயகம் என்றால் புலியல்லாத அனைத்துமே 'ஜனநாயகம்" என்று கூறுமளவுக்கு அரசியல் குறுகிவிட்டது. தேசியம் என்றால் புலியிசமே என்றளவுக்கு அதுவும் மலினப்பட்டுக் கிடக்கின்றது. இதற்கு வெளியில் வேறுபட்ட சிந்தனை முறை எதுவும் கிடையாது. நாம் இதில் இருந்து வேறுபட்டுப் பார்க்கின்றோம்.

மக்களின் அடிப்படை உரிமைகளில் இருந்து இதை நோக்குவதால், புலி மற்றும் புலியெதிர்ப்பு பிரிவுகளிடம் இருந்து கடுமையான எதிர்த்தாக்குதலை ஒரே நேரத்தில் சந்திக்கின்றோம். அவர்கள் இதைக் கோட்பாட்டு ரீதியாக எதிர்கொள்ள முடியாது என்பதால் தான், தனிமனித அவதூறுகளாக சந்திக்கின்றோம். அரசியல் ரீதியாக இதைப் புறந்தள்ளிக்கொண்டு தான், மக்களின் உரிமைகளை நோக்கி முன்னிறுத்தி முன்னேற முடியும். இதை எமது அனுபவம் மட்டுமின்றி, விமர்சனமும் சுயவிமர்சனமும் கூட எடுத்துக் காட்டுகின்றது.

 

பேரினவாத 'ஜனநாயக"த்தில் மக்களுக்கு 'ஜனநாயகம்" கிடைக்கின்றதா? ஆம் என்று சொல்லுகின்ற, அதை ஆதரிக்கின்ற, கண்டும் காணாமல் விடுகின்ற வகையில் புலியல்லாத 'ஜனநாயக" தளங்கள் இயங்குகின்றது. இதற்குள் தான், இப்படித்தான் புலியல்லாத தளங்கள் அரசியல் பேசுகின்றது. ஜயா 'ஜனநாயக" வாதிகளே, இது எப்படி? என்று கேட்டால், நீங்கள் எத்தனை பேர் உள்ளீர்கள் என்று கேட்கிறார்கள். நீ ஒருவன் தானே என்று நக்கலும் நையாண்டியும் அடித்து குலைக்கிறார்கள், கடிக்கின்றார்கள் கடித்துவிட்டு...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்



No comments: