தமிழ் அரங்கம்

Saturday, October 4, 2008

கொக்கோகோலாவின் ஏகபோக விநியோகத்தை, அதிக வரி மூலம் புலிகள் தமது கட்டுப்பாட்டில்...

புலிகளின் வரவாற்றில் அவர்களை முதன் முதலாக தமிழ் மக்கள் மிக நெருக்கமாகவே, சொந்த அனுபவவாயிலாக புரிந்து கொண்டுள்ளனர். மக்களை நேரடியாக பாதிக்கின்ற உடனடி நிகழ்ச்சி, பரந்துபட்ட மக்களை விழிப்படைய வைத்து விடுவதுண்டு. இது புரட்சிக்குரிய தயாரிப்பு காலங்களில் புரட்சியின் உந்து விசையாகின்றது. தமிழ் மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி உடனடி நிகழ்வால் அல்ல, ஒரு குறுகிய கால நடவடிக்கையால் நடந்துள்ளது. அமைதி சமாதானம் புலிகளுக்கு எதிரான மனஉணர்வை தமிழ் மக்களின் உணர்வு மட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25 வருட போராட்டத்தில் அவர்களின் போலித்தனமான வேடங்கள் மக்கள் முன் அம்பலமானது, இந்த அமைதிக்கு பின்னான காலகட்டத்தில் தான், மக்கள் ஒவ்வொருவரும், சுயமாக புலிகளை சொந்த அனுபவம் வாயிலாக மிக நெருக்கமாக புரிந்து கொண்ட நிகழ்வு, முதன் முறையாக நிகழ்ந்துள்ளது. இந்த அனுபவம் துரதிஸ்டவசமாக தவிர்க்க முடியாது, சொந்த இனத்தின் மொத்த நலனுக்கு எதிரானதாக உள்ளடகத்தில் பிரபலிக்கின்றது. எந்த பிரச்சார சமூக வடிவங்களையும் தாண்டிய மக்களின் சொந்த அனுபவம், புலிகளின் அரசியல் அழிவுக்குரிய சூழலை உருவாக்கியுள்ளது. தமது சொந்த அழிவுக்கே தாமே வித்திடும் அழிவுக்குரிய மக்கள் விரோத நடவடிக்கைகளை, புலிகள் தமது சொந்த அரசியலாக வரிந்து கொண்டுள்ளனர்....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: