தமிழ் அரங்கம்

Tuesday, October 21, 2008

இந்தியத் தலையீட்டைக் கோரும் தேசியம்

இதைக் கோருவதுதான் புலித் தேசியம் என்றால், தமிழ்நாட்டு தமிழ் உணர்வும் இதற்குள் தரங்கெட்டு கிடக்கின்றது. ஒரு இனம் தனக்காக தான் போராடமுடியாத வகையில் சிதைக்கப்பட்டுள்ளது. இயக்கங்கள் முதல் இந்தியா வரை, தமிழ்மக்கள் தமக்காக போராடுவதை திட்டமிட்டே தடுத்து நிறுத்தினர்.

இதன் முதிர்வில் பேரினவாதத்துக்கு எதிராக தமிழ்மக்கள் போராடுவது, புலிக்கு எதிராக போராடுவதாக கூறி அவர்கள் மேல் புலிப்பாசிசம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

இப்படி ஒரு இனத்தின் மேல் அவலத்தை விதைத்தவர்கள், இன்று அதில் குளிர் காய்கின்றனர். ஒரு இனத்தை எந்தளவுக்கு இழிவுபடுத்தமுடியுமோ, அந்தளவுக்கு மீண்டும் மீண்டும் அதைச் செய்கின்றனர். சமகால அரசியல் நிகழ்ச்சிகள், 1983, 1987 களில் இந்தியா தலையிட்டது போல் மீண்டும் அழைப்பு விடுக்கின்றது. 1987 இல் எப்படி இந்தியத் தலையீடு கோரப்பட்டதோ, அதே போன்று ஒரு நிலைமை உருவாக்கப்படுகின்றது.

பேரினவாதம் தமிழ்மக்கள் மேல் கட்டவிழ்த்துவிட்டுள்ள இராணுவ வெறிச்செயல், மனித துயரத்தையே ஆறாக பெருக்கெடுக்க வைக்கின்றது. இதை தடுத்து நிறுத்த, இந்தியத் தலையீட்டை முன்வைக்கின்றனர். இதுபோல் 1987 இல் தலையீடு நிகழ்ந்த போது என்ன நடந்தது!?

பல ஆயிரம் தமிழ்மக்களை கொன்ற இந்திய இராணுவம், இலட்சக்கணக்கான மக்களை அகதியாக்கியது. பல நூறு பெண்களின் கற்பையே சூறையாடிவர்கள், பொருளாதாரத்தை சுடுகாடாக்கினர். இதைத்தவிர எதையும், இந்திய ஆக்கிரமிப்பாளன் தமிழ்மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லை. அன்று தம்முடன் சேர்ந்து நின்ற கூலிக்குழுவான ஈ.என்.டி.எல்.எப், வை இன்றும், இந்தியா பராமரித்து வருகின்றது.

பேரினவாதத்துக்கு
இணையா.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: