தமிழ் அரங்கம்

Sunday, October 19, 2008

சிங்கள பேரினவாதத்துக்குள் சிதைந்து சின்னாபின்னமாகிவரும் தமிழ் தேசியமும், தமிழ் தேசிய உணர்வும்

மீண்டும் மீண்டும் அமைதி, பேச்சுவார்த்தை என்று தொடரும் அரசியல் நாடகத்தில் பங்கேற்கும் அரசியல் கோமாளிகள், ஒட்டுமொத்த மக்களின் வாழ்வையும் மிக கேவலமாகவே இழிவாடுகின்றனர். அதேநேரம் இவர்களின் கோமாளித்தனம் உருவாக்கும் ஒவ்வொரு அமைதியும், மக்களின் நிம்மதி மூச்சாகவே எழுகின்றது. இவை எல்லாம் எதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. யுத்தம் மக்களுக்கானதல்ல என்பதையும், யுத்தம் மக்களுக்கு எதிரானதாகவே நடத்தப்படுவதையும் எடுத்துக் காட்டுகின்றது. இதுவே தமிழ் தேசிய யுத்தம் பற்றிய மக்களின் மனப்பாங்காகும்.

வாய்பேசவே முடியாத அசாதாரணமான ஒரு நிலையில், மக்கள் தேசியத்தின் பெயரில் வாழவைக்கப்படுகின்றனர். மக்கள் தமது சொந்தக் கருத்தை ஊமையாக வெளிப்படுத்தும் விதத்தின் மூலம், இதன் மீதான தமது ஆழ்ந்த வெறுப்பைப் பிரதிபலிக்கின்றனர். தேசியத்தின் பெயரிலான யுத்தம் இப்படி என்றால், தேசியத்தின் பெயரிலான அமைதியும் கூட மக்களுக்கு எதிராகவே உள்ளது. மக்கள் புலித் தேசியத்தின் பெயரில் வாழவழியின்றி, தேசியத்தின் பெயரில் வாழ்வை இழந்து நிற்கின்றனர். சொந்தக் குழந்தையை, குடும்ப உறுப்பினரை, உறவினரை, ஏன் சமூகத்தின் கூட்டைக் கூட இழந்து விட்டனர். இதன் மேல் எந்த அபிப்பிராயமும் சொல்ல முடியாத நிலையில் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். சொல்பவன் மேலும் இழப்பை தாங்கிக் கொள்ள வேண்டிய துயரமே, எமது புலித் தேசியமாகிவிட்டது.

இது மட்டுமா இல்லையே, உழைப்பை, சொத்துக்களை, சுற்றுச் சூழலை, சிந்தனை ஆற்றலை, ஏன் சமூகத்தின் ஆற்றல்மிக்க பரஸ்பர இயங்கியல் உறவை எல்லாம் தமிழன் இழந்துவிட்டான். இதையே தேசியம் என்கின்றனர். இதையே தமிழ் தேசிய வெற்றி என்கின்றனர். பிரபாகரனும். சுற்றி வாழ்பவர்களின் வாழ்க்கையையும் தான் தேசியம் என்றும், தேசிய வெற்றியும் என்கின்றனர். இந்த சிறு கும்பல் இத........... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: