தமிழ் அரங்கம்

Tuesday, November 11, 2008

 (வன்னி) மக்களின் உண்மை அவலத்தை யாரும் பேசுவது கிடையாது!

(வன்னி) மக்கள் பற்றி புலிகள் என்ன நினைக்கின்றனரோ, அதுபோல் அரசு என்ன நினைகின்றனரோ, அதைபற்றி மட்டும்தான் பேசுகின்றனர். உண்மையில் இவர்கள் சொல்வதற்கு எதிராகவும் அல்லது ஆதாரவாகவும் குலைக்கின்றனர். இப்படி மனித வாழ்க்கை திரிக்கப்பட்டு, குறுகிய பிரச்சார நோக்கின் அடிப்படையில் தான் உலகில் முன் கொண்டு வரப்படுகின்றது.

ஈழத்துப் புலிப்பினாமிகள் முதல் தமிழ்நாட்டில் கடைகெட்டுப் போன பிழைப்புவாதிகள் வரை, இதைத் தாண்டி மக்களை மக்களாக யாரும் பார்க்கவில்லை. அந்த (வன்னி) மக்களின் பிரச்சனைகள் என்ன? அவர்கள் என்ன நினைக்கின்றனர்? என்பது பற்றியெல்லாம், யாருக்கும் எந்த அக்கறையும் கவலையும் கிடையாது. இதுதான் உண்மை.

இந்த மக்களிள் அவலமோ மிகப்பெரியது. அது மக்களுகே உரிய அவலம். எந்த நாதியுமற்ற நிலையில், கேட்பாரற்று நசிந்து நலிந்து கிடக்கின்ற சமூக அவலம்.

இவைகள் அனைத்தும் வன்னி மக்களின் உற்றார் உறவினர் நண்பர்களிடையே மட்டும், பகிர்ந்து கொள்ளப்படும் துயரங்களாக உள்ளது. எந்த ஊடாகமும் இதைப் பேசுவது கிடையாது. அவையோ புலி - அரசு என்ற வட்டத்தைச் சுற்றி, அதை திரித்தும் புரட்டியும், கதைகள் எழுதுகின்றன, கதைகள் சொல்கின்றன. துயரம்பற்றி தம் குறுகிய நோக்கத்துக்காக, திரித்தும் பரட்டியும் ஒரு பக்கமாக மட்டும் பிரச்சாரம் செய்கின்றனர்.

வன்னி மக்களுடன் தொடர்பில் உள்ள ஒவ்வொருவருவரிடமும், அந்த மக்கள் பற்றிய வெளிவராத கண்ணீர் கதைகள் பற்றிய உண்மைகளும் அனுபவங்கங்களும் உண்டு. இன்று ............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: