தமிழ் அரங்கம்

Friday, November 14, 2008

மாத்தையாவும் பிரபாகரனும் - பிள்ளையானும் கருணாவும்

செம்மறித் தமிழர்களுக்கு எல்லோரும் நாடகம் காட்டுகின்றனர். மோதலும் - சமாதானமும் என்று, போட்டோவில் காட்சியளிக்கின்றனர். ஆம் அன்று மாத்தையாவும் பிரபாகரனும் இப்படித்தான் தமிழ் மக்களுக்கு கதை சொன்னார்கள். கடைசியில் மாத்தையாவின் கதை அனைவரும் அறிந்ததே.

காலில் இரும்பிலான விலங்கு ஓட்டப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டு, எலும்புகள் முறிக்கப்பட்டு கொல்லப்பட்டான் மாத்தையா. தலைவர் உபதலைவர் சண்டை, இப்படித்தான் புலிகளின் வரலாற்றில் முடிந்தது. கொல்லப்பட்ட மாத்தையா ஒன்றும் புனிதமானவனல்ல. இதையே அவனும் அன்றாடம் செய்தவன். புலியின் அதே விதி, அவனையும் விட்டுவைக்கவில்லை.


இதேபோல் இன்று பிள்ளையான் கருணா மோதல். இலங்கை அரசின் கைக்கூலிகளுக்குள் நடக்கும் எலும்புச் (பதவிச்) சண்டை. ஆளையாள் கொல்வதில் தொடங்கிய இந்தச் சண்டை, ஒருவர் கொல்லப்படும் வரை தொடரும். அதுவரை நாடகங்களும் தொடரும். இவை அனைத்தும், தமிழ் மக்களின் பெயரில் அரங்கேறுகின்றது.

கருணா புலியை விட்டு விலகிய பின், இலங்கை அரசின் கைக்கூலியாக மாறினான். இருந்தபோதும் மக்கள் விரோதியாக புலிகளில் இருந்தாலும், புலிகளின் கொலைக் கும்பலுக்கு முன்னால் சுதந்திரமாக நடமாட முடியவி;ல்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு பிள்ளையான், கருணாவின் முதுகில் குத்தி அதிகாரத்தைக் கைப்பற்றினான். கருணாவின் விசுவாசிகளைக் கொன்றான்.

பேரினவாதத்தின் பிரித்தாளும் தந்திரத்துக்கு ஏற்ற........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: