தமிழ் அரங்கம்

Monday, November 17, 2008

புலிகளின் தோல்வியை நாம் எப்படி கற்றுக் கொள்கின்றோம்?

மக்களின் வரலாற்றில் எது நடக்கக் கூடாதோ, அது இன்று அவர்கள் வரலாறாகி விடுகின்றது. மக்களிள் துயரமும் துன்பமும் விடுதலையின் பெயரில் வாழ்வாகி விடுகின்றது. இதை போராட்டம் என்று கூறி, தன் சொந்த முடிவை தானே தெரிவு செய்து கொண்டது.

இப்படிப் புலிகள் தம் தோல்வியையும், அழிவையும், தாமே தெரிவு செய்து தம் சொந்த வழியில் ஏற்படுத்திக் கொண்டனர். இதை நாம் தீர்மானிக்கும் சக்தியாகவோ, தடுக்கும் சக்தியாகவோ இருந்தது கிடையாது.

மறுபக்கத்தில் புலிகளின் சொந்த அழிவையிட்டு சிலர் மகிழ்வது போல், சிலர் அழுவது போல், இதை நாம் எடுக்கவில்லை. அப்படியானல் நாம் இதை எப்படிப் பார்க்கின்றோம்? மக்கள் இதையிட்டு என்ன நினைக்கின்றனர்? இவையெல்லாம் எம் முன்னுள்ள அடிப்படையான கேள்விகள்.

இந்த கேள்விகள், விருப்பங்கள், பார்வைகள், இதையொட்டிய கருத்துகள் இந்த நிலைமையை மாற்றிவிடாது என்ற உண்மை ஒருபுறம். மறுபுறத்தில் இதை பற்றிய தெளிவு தான், மனித குலத்தை எதிர்காலத்தில் மாற்றி அமைக்கும். இதன் அடிப்படையில் தான், எம் எதிர்வினைகள் அமைகின்றன.

நாம் புலிகளின் சொந்தத் தோல்வியை எதிர்மறையில் கற்றுக்கொள்ளக் கோருகின்றோம். பல ஆயிரம் ஆயுதம் ஏந்திய உறுப்பினர்கள் முதல் விமானங்கள் கொண்ட ஒரு இயக்கம்,..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: