தமிழ் அரங்கம்

Saturday, November 22, 2008

முசுலீம்கள் மீது மோடி வாரியிறைத்த அவதூறுகளையே திர்ப்பாகத் தந்துள்ளது.)

குஜராத் மாநிலத்திலுள்ள கோத்ரா தொடர்வண்டி நிலையத்தில், சபர்மதி விரைவு வண்டியின் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து போனதை விசாரித்து வந்த நானாவதி கமிசன், இச்சம்பவம் பற்றி இந்து மதவெறிக் கும்பல் எந்தப் பொய்யைப் பிரச்சாரம் செய்து வருகிறார்களோ, அந்தப் பொய்யையே தீர்ப்பாக அளித்திருக்கிறது.

"இச்சம்பவம் உள்ளூர் (கோத்ரா) முசுலீம்கள் திட்டம் போட்டு நடத்திய சதிச் செயல்; குஜராத் முதல்வர், அவரது அமைச்சர்கள், அம்மாநில போலீசு அதிகாரிகளுக்கும் இச்சம்பவத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது; குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியும், மறுவாழ்வும் அளிப்பதில் குஜராத் மாநில அரசு எவ்விதச் சுணக்கமும் பாரபட்சமும் காட்டவில்லை'' என நானாவதி கமிசன், தனது தீர்ப்பின் முதல் பாகத்தில் அறிவித்திருக்கிறது. ""இச்சம்பவம், உள்ளூர் முசுலீம்களின் சதிச் செயல் என்பதற்குப் பதிலாக, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யின் சதிச் செயல்'' என நானாவதி கமிசன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தால், நரேந்திர மோடி இன்னும் மகிழ்ந்திருக்கக் கூடும்!

காங். கூட்டணி மைய அரசைக் கைப்பற்றிய பிறகு, ரயில்வே அமைச்சகம் கோத்ரா சம்பவம் பற்றி விசாரிக்க யு.சி. பானர்ஜி என்ற முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதியின் தலைமையில் ஒரு கமிசன் அமைத்ததும்; அக்கமிசன் ""கோத்ரா சம்பவம் ஒரு எதிர்பாராத விபத்து'' எனத் தீர்ப்பளித்திருப்பதும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். ஒரு சம்பவம், நேரெதிரான இரண்டு தீர்ப்புகள் சுவாரசியமான முரண்பாடுதான்.

இந்து மதவெறிக் கும்பலின் ஊதுகுழலான துக்ளக் ""சோ'', ""பானர்ஜி கமிசனின் அறிக்கை, பீகார் சட்டசபை தேர்தலுக்காக லல்லு பிரசாத் யாதவ்வால் அரங்கேற்றப்பட்ட நாடகம்'' என ஒதுக்கித் தள்ளுகிறார். சோவின் தர்க்கவாதம் உண்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டும்; ஆனாலும், நானாவதி கமிசனின் அறிக்கையை நீதிநெறி பிறழாதத் தீர்ப்பாக எடுத்துக் கொள்ள முடியாது.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: