தமிழ் அரங்கம்

Tuesday, December 30, 2008

மோதல் கொலையா? கட்டுக்கதையா?

தில்லியில் கடந்த செப்டம்பர் 13 அன்று குண்டு வெடித்த ஆறாவது நாள் செப்டம்பர் 19 அன்று, அந்நகரின் தென்பகுதியில் உள்ள ஜாமியா நகரில், ''பாட்லா ஹவுஸ்'' என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் தில்லி போலீசின் சிறப்புப் பிரிவு நடத்திய தேடுதல் வேட்டையில், ''இரண்டு முசுலீம் தீவிரவாதிகள் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்; இருவர் தப்பியோடிவிட்டதாகவும்; ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டிருப்பதாகவும்'' அறிவிக்கப்பட்டது.

''கொல்லப்பட்ட தீவிரவாதிகளான முகம்மது பஷீர் என்ற அடிஃப் மற்றும் முகம்மது பக்ருதீன் என்ற சஜித் ஆகிய இருவரும் தில்லி குண்டு வெடிப்புக்குக் காரணமான இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்; அடிஃப்தான் அந்த அமைப்பின் தளபதி; ஜெய்ப்பூர், அகமதாபாத் நகரங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கும் இவர்கள்தான் காரணம்'' என்று தில்லி போலீசு அறிவித்தது.
இந்த மோதல் நடந்த அடுத்த சில தினங்களிலேயே சாகிப் நிஸார், ஷீஷன் உள்ளிட்ட பல முசுலீம் இளைஞர்கள் ஜாமியா நகரிலிருந்து கைது செய்யப்பட்டனர். ''இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைமையை அழித்தொழித்து விட்டதாக'' அறிவித்தார், தில்லி போலீசின் இணை கமிசனர். இம்மோதலின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தில்லி போலீசின் மோதல் கொலை நாயகன் எனப் புகழப்படும் போலீசு ஆய்வாளர் மோகன் சாந்சர்மா மோதலின்பொழுது சுடப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி இறந்து போனார்.

No comments: