தமிழ் அரங்கம்

Saturday, February 7, 2009

புலிகளைக் காப்பாற்றும் பேராசைகளால், வன்னி மக்களின் இரத்த சகதிக்குள் ...

தமிழ் மக்களைக் காக்க வக்கற்ற `சோளக்காட்டு பொம்மை` அரசியல், இதே ஐரோப்பிய நகரங்களில் `பொங்கு தமிழாக` யுத்தப் பிரடணம் செய்து விட்டு இன்று யுத்த நிறுத்தத்தைக் கோருகிறது. இன்றைய உலக ஒழுங்குக்கான நிகழ்ச்சி நிரலை புரிந்து கொள்ள முடியாத நெருப்புக் கோழிகளாகத் தலைகளைப் புதைத்த புலம் பெயர் தமிழர்கள், புலிகளைக் காப்பாற்றும் பேராசைகளால், வன்னி மக்களின் இரத்த சகதிக்குள் தம் தலைகளை அறியாமல் புதைப்பதை தீவிரப்படுத்துகிறது.

உலகமே சுற்றி நின்று புலிகள் மீது போர் தொடுப்பதாகக் கூறுகின்ற இவர்களே அவர்களிடம் கருணை மனுக்களைக் கொடுக்கின்ற பரிதாப நிலைக்குள் தள்ளப் பட்டுள்ளனர். சுட்டுவிரலை நீட்டி இந் உலகத்திடம் தமிழ் மக்களின் தார்மீக உரிமைகளைக் கோர முடியாத புலிகள், தம் கைவிரல்களுக்குள்ளேயே தமது கதையை மெளனமாக எண்ணத் தொடங்கி விட்டனர்.

புலிகளின் கைகளில் மாட்டியிருக்கும் வன்னி மக்கள் - அவர்களின் வெளியேற்றத்துக்கான மறுப்பு, சிங்கள பெளத்த இனவாதிகளின் இன
......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

1 comment:

கிருது said...

Ramadass, vaiko and Thiruma should know other face of Tigers. Totally different from Tamilans and Tiger .