தமிழ் அரங்கம்

Thursday, February 12, 2009

தமிழினத்தை அழிக்க உதவும் பாசிசப் பிரச்சாரங்கள்

காயடிக்கப்பட்ட தமிழனை, புலிகள் கூறுவது போல் 'வோட்டர் மார்க்" மூளைகளையே பாசிசம் உற்பத்தி செய்கின்றது. மனிதனின் பகுத்தறியும் அறிவையே மறுப்பதும், உருட்டல் மிரட்டலை மனித உணர்வாக வளர்ப்பது, நேர்மையற்ற சமூக நடத்தையை மனிதப்பண்பாக கொள்ள வைப்பதுமே பாசிசத்தின் தேர்வு.

அப்பாவி மக்கள் மேல் திணிக்கும் இந்த மனிதத்தன்மையற்ற பாசிச நியாயவாதங்கள், அபின் உண்டவர்கள் போல் புத்திபேதலித்தவர்களை உருவாக்குகின்றது. மதப்பிரச்சராம் போல், இதன் தர்க்கவாதத்தில் நாணயம் எதுவுமற்று அனைத்தையும் அப்படியும் இப்படியும் திரித்துப் புரட்டுகின்றது.

தமிழினம் சந்திக்கின்ற மனித அவலம், அந்த அழிவில் இருந்து மக்களை மீட்பதற்கு வழி தேடுவதற்கு பதில், குதர்க்கமாகவே வாதிட்டு தமிழினம் அழிவதற்கு துணை போகின்றனர். இதற்குள் கருத்தை வைப்பவர்களும், வாதிடுபவர்களும், தாம் இன்று வாதிட்டது நாளை தவறு என்று தெரிகின்ற போதும் அதற்காக மனம் வருந்துவது கிடையாது. அதற்காக வெட்கப்படுவது கிடையாது. மாறாக அலட்டிக் கொள்ளாது, புதிய பாணியல் நியாயப்படுத்தி அதை வாதிடுவதும் அரங்கேறுகின்றது.

தமிழினத்தின் இன்றை.................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: