தமிழ் அரங்கம்

Friday, February 13, 2009

புலிகளே சொல்லுகின்றனர், செய்கின்றனர்.

பொய்யையும், புனைவையும் பாசிசம் 'வோட்டர் மார்க்"காக அடிக்கின்றது. இதை நாம் சொல்லவில்லை. புலிகளே சொல்லுகின்றனர், செய்கின்றனர். மனித அவலத்தை உருவாக்கி, அதை 'வோட்டர் மார்க்" அடித்து, தமிழனின் உணர்ச்சியை தட்டியெழுப்புகின்றனராம். உலகத்திலேயே ஆக படித்த முட்டாள்களைக்; கொண்ட சமூகத்தின், தமிழன் என்ற உயிர் துடிப்பு இப்படி 'வோட்டர் மார்க்" வழியாகத்தான் புலிகள் உருவாக்குகின்றனர்.

இதற்கு இங்கு மனித அவலம் பிரச்சாரப் பொருளாகின்றது. இதனால் மனித அவலம் உற்பத்தி செய்யப்படுகின்றது. அதன் மேல் கற்பனைகள், புனைவுகள், இட்டுகட்டல்கள், பொய்கள் என்று பொழியப்படுகின்றது. இந்த வகையில் இலங்கைத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள் நம்பும் வண்ணம், அவர்களை ஏமாற்றும் வண்ணம் 'மக்களின் அவலங்களுக்கு வோட்டர் மார்க் அடிப்ப"தை புலிப் பாசிசம் மறுக்கவில்லை, அதைச்செய்கின்றது. அதைச் செய்யவும்; கோருகின்றது!

நடந்த ஒரு நிகழ்ச்சி, அதையொட்டி புலியின் 'வோட்டர் மார்க்" பிரச்சாரத்தையும் அதில் உள்ள 'மனித அக்கறையையும்" பார்ப்போம். விசுவமடு இடைத்தங்கல் முகாமில் மக்களுடன் மக்களாக வந்த புலிகள், நடத்திய தற்கொலை தாக்குதலை எடுங்கள். இங்கு இதைப்பற்றி புலிகள் எப்படி 'வோட்டர் மார்க்" அடித்து சொன்னார்கள் என்பதையும், இதற்கு பலியானவர்கள் எப்படி நியாயவாதம் செய்தார்கள் செய்கின்றார்கள் என்பதையும் போகிறபோக்கில் பலரும் அறிந்ததுதான். ஆனால் அதன் உள்ளடக்கத்தை உடைத்து பார்த்தால், எம் படித்த அறிவிலித்தனம் புலிக்கூடாகத் தெரியும். மஞ்சள் காமாலை நோய் மாதிரி, எல்லாம் புலிக்கூடாக பார்க்கும் மனிதவிரோத மனநோய் தெரியும். எப்படிப்பட்ட மனித விரோதிகள் நீங்கள் என்ப.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: