தமிழ் அரங்கம்

Sunday, October 2, 2005

புலிப் பாசிசத்தை ஒழிக்க,

ஆயுதம் எந்தக் கோருகின்றது புலியெதிர்ப்பு பாசிசம்.....

.....சரி எகாதிபத்தியம், பேரினவாதமும் வரவிட்டால் என்ன, எங்களிடம் பாசிசத்தை ஒழிக்க மாற்று வழி இல்லையா என்ற கேட்டு, இதோ பார் இருக்கின்றது என்று புதிய சரக்கொன்ற ஒன்றை மாற்றாக முன்வைக்கின்றனர். அது என்ன என்று ஆச்சரியமாக இருக்கலாம். அந்த திரொக்சிய பினாமிய வழி "புலிவிரோத அரசியற் சக்திகளுக்கு முன்னால் மீண்டும் ஓர் மாபெரும் கைங்கரியத்தையும் கடமைப் பாட்டையும் வரலாறு திணித்துள்ளது. அது எண்பத்தி மூன்றை விடவும் மிகப்பெரியது, கடினமானது. அதுதான் புலிக்கெதிராக மீண்டும் ஆயுதமேந்திய எழுச்சியை மேற்கொள்ள வேண்டும்." ஆக ஆக இறுதியாக புலிப்பாசித்தை ஒழிக்கவே ஒரு வழியைக் கண்டு பிடித்தாயிற்று. இதைவிட்டால் வேறு வழி கிடையாது. ஆகவே புலி பாசித்தை ஒழிக்க இதுவே மாற்று என்கின்றனர். எனவே ஈ.பீ.டீ.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ,மட்டக்கிளப்புக் கருணா அணியுடன் கூடி, பாசிச ஒழிப்பில் ஈடுபட வருமாறு தேனீயும், ரி.பி.சியும், திரொக்சிய காவடியும் புலியெதிர்ப்பு அணிகளிடம் கோருகின்றனர். இதைக் கேட்டு யாருமே சிரிக்க வேண்டாம். தேனீ வாசகர்கள் எதிர்வினை இன்றி இதை வாசித்து சேரிப்பதும், ரி.பி.சி வாசகர்கள் இதை செம்மறியாடக கேட்டு நிற்பதும், எந்த விதத்திலும் புலிப்பாணி பிரச்சாரத்துக்கு குறைந்தவையல்ல. இதைத்தான் அவர்கள் உங்களைச் செய்யக் கோருகின்றனர். அதைத் தான் உங்களுக்கு வழிகாட்டுகின்றனர்.

இந்தக் கும்பல் கருத்துகளில் ஒரு விதண்டவாதமும், முரண்பாடும் இருப்பதை அதன் வாசகர்கள் கவனிக்காது இருக்கவே இருக்கிறது புலியெதிர்ப்பு அரசியல். ரிபிசியும், தேனீயும் அது சார்ந்த கும்பல்களும் புலியை மடக்க முன்வைக்கும் அரசியல் இங்கு நெருடுகின்றது. புலிகளை மடக்க முன்வைக்கும் ஒருவாதம் கேள்விக்கு உள்ளாகின்றது. அனைத்து அரசியல் படுகொலைகளை எதிர்க்கும்; இந்த கும்பலின் அரசில், அதாவது யாரையும் யாரும் கொல்வதற்கு உரிமை இல்லை என்ற விடையத்தை, இந்த ஆயுதம் எந்த விடுக்கும் அரசியல் எப்படிக் கையாளும். அங்கு யாரையும் யாரும் கொல்லும் கொலைகள் இருக்காதோ! தாங்கள் ஆயுதம் எந்துவது, யாரையும் யாரும் கொல்வதற்காக அல்ல, சும்மா கவர்ச்சிக்கு எந்துவதற்கே என்கின்றனர். நம்புங்கள் இந்த அரசியல் கோமளித்தனத்தை. புலிக்கு நிகாரன இவர்களின் கபடமான அரசியலை. தேனீ ஆசிரியர் ரி.பி.சியில் தொலைபேசி மூலமே கொலையை கண்டியுங்கள் என்று புலிகளை மடக்கி வாய்கிழய உபதேசித்த அதே கிழமை தான், ஆயுதம் எந்திய பாசிசத்தை ஒழிக்கும் வரலாற்று கடமைக்கு அறைகூவல் விடுத்த கட்டுரைக்கு ஊh பெயர் தெரியாது அனாதையாகவே பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதை ரி.பி.சி பெருமையுடன் ஒளிபரப்பியது.

யாரையும் யாரும் கொல்லமுடியாது என்று கூறும் இந்த கயவாளிகள் தான், புலிப் பாசிச ஒழிப்புக்காக எகாதிபத்தியம் இலங்கை அரசு இராணுவ ரீதியாக தலையிடக் கோருகின்றனர்?. அத்துடன் ஆயுதம் எந்தவும் கோருகின்றனர். இந்தப் புலிப் பாசிச ஒழிப்பில் யாரும் யாரையும் கொல்ல முடியம் என்பது இவாகள் சொல்லாத சொல்லும் செய்தி. இன்றைய அவர்களின் சந்தர்ப்பவாத நிலவரப்படி, வலிந்த கோரும் தலையிட்டின...

இக் கட்டுரையை விரிவாக பார்வையிட http://tamilcircle.net/news/theene%20politi.htm

------------------------------------------------------------------------

No comments: