தமிழ் அரங்கம்

Monday, February 4, 2008

தமிழ்மணத்தில் ஊருகின்ற அட்டைப் புழு தான், பார்ப்பனிய(தமிழ்)மணி என்ற பார்ப்பான்

பி.இரயாகரன்
04.02.2008

ந்த பார்ப்பனியமணியின் அறம் என்பது, நவீன மனுதர்மம் தான். ஒடுக்கப்பட்ட சாதிகளையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒடுக்கிவாழ்கின்ற சொந்த அற்பத்தனத்தைத் தான், தமிழ்மணத்தில் காறி உமிழ்ந்து வந்தவன். இதற்கு எதிராக போராடும் கம்யூனிஸ்ட்டுகளையும், பெரியாரிஸ்ட்டுகளையும் திடட்மிட்டு, பார்ப்பனியத்துக்கே உரிய நயவஞ்சகத்துடன் கூடிய சதியுடன் தூற்றிவந்தனர். ஏகாதிபத்தியம் கம்யூனிசத்துக்கு எதிராக கட்டமைக்கும் அவதூறுகளை, பார்ப்பனிய உள்ளடகத்தில் புனைந்து, புணர்ந்து வெளியிட்டு வந்தனர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை உறிஞ்சி வாழ்கின்ற இந்த பார்ப்பனியம் ஏகாதிபத்திய அற்பத்தனத்தை, கம்யூனிச எதிர்ப்பின் ஊடாகவே நியாயப்படுத்தியது. ஒரு எதிரியாக கம்யூனிசத்தை கட்டமைத்துக் காட்டுவதன் மூலம், மனுதர்ம சாதிய அறங்களை உன்னதமான ஜனநாயகம் என்று தமிழ்மணத்தில் பீச்சியடித்தனர்.

இந்த பார்ப்பனிய சாதிய வக்கிரத்தை நிலைநாட்ட 'நண்பர்" என்ற விழிப்புடன் கூடிய அடை மொழியில், அழைத்து காறித் துப்பினர். காந்தி அரிஜன் என்று அழைத்து, அம்பேத்கர் மேல் காறித் துப்பியது போல் தான் இதுவும்.

இப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட மக்களின் கருத்துகளுக்கு எதிராக, விவாதம் என்ற பெயரில் ஏகாதிபத்திய எச்சிலை பார்ப்பனிய உத்தியுடன் காறி உமிழ்ந்தனர். தனது சுரண்டும் வர்க்கத்துக்கு (பார்ப்பனிய) ஏற்ற அனைத்தையும் அது முண்டு கொடுத்தபடி, தனக்கு எதிரான அனைத்தின் மீதும் தனது அற்பத்தனமான முதலாளித்துவ பொய்கள் புரட்டுகள் மூலம் காறி உமிழ்ந்தனர். மனித இனத்தைச் சுரண்டி, அவர்களை அடிமைப்படுத்தி நக்கிப்பிழைக்கும் இந்தக் கூட்டம், சொல்ல வருவது என்ன?

மனித அடிமைத்தனங்கள் என்பது, இயற்கையானது இயல்பானது என்பதை சொல்ல முனைந்தது. இதை எதிர்த்துப் போராடும் கம்யூனிஸ்ட்டுகளை (பெரியாரிஸ்ட்டுகள் உட்பட அனைத்தையும்) இழிவுபடுத்திக் காட்டமுனைந்தது.

தமது ஆதிக்க நலன் காக்கும் பார்ப்பனியத்தையும், மனித உழைப்பை சுரண்டித் தின்னும் சுரண்டலையும், பாதுகாக்கவே இதற்கு எதிரான போராட்டங்கள் மீது காறி உமிழ்ந்தனர். இப்படி தமக்கு எதிரான போராட்டகளை தடுக்கவே, இந்த பார்ப்பனமணி பார்ப்பனிய அற்ப புத்தியுடன் எதிர்வினையாற்றுகின்றார். மனித அடிமைத்தனங்களுக்கு தமது இந்த சமூக அமைப்பு காரணமல்ல என்று, வாய் கூசாது புளுக முனைகின்றனர்.

இச் சமூக அமைப்பிலுள்ள சகல இழிவுகளுக்கும் எதிராக, கம்யூனிஸ்ட்டுகள் மட்டும் தான் போராடுகின்றனர். இதனால் இந்த முதலாளித்துவ பார்ப்பனிய அற்பவாதிகளின் முதல்தரமான எதிரியாக கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே உள்ளனர்.

இதனால் இதன் மீது தூற்றுவது, அந்த வர்க்கத்தின் சொந்த இயல்பாகின்றது. சந்தையில் விற்பனைப்பொருள் பொய்களும், ஆணாதிக்க ஆபாச விளம்பரங்கள் மூலமும் எப்படி விற்கப்படுகின்றதோ, அப்படித் தான் இதுவும். இதன் போது பெண்ணை ஆணாதிக்க கவர்ச்சிக்காக நிர்வாணப்படுத்தி, பெண் பலியிடப்படுகின்றாள். இதை செய்யும் இந்த வர்க்கம், தனக்கு எதிரான போராட்டத்திலும் இதைத்தான் செய்கின்றது.

இதற்காக கம்யூனிசத்துக்கு எதிராக, தனக்கு எதிராக போராடும் பிற ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தை நிறுத்த முனைகின்றது. அற்ப புத்தி கொண்ட பார்ப்பனியம் இந்த சூதில், சதியில் வல்லவர்கள். காலாகாலமாக இதை செய்து வந்தவர்கள் என்பதால், அற்பத்தனமான குறுக்கு வழிகளில் அதை கையாளுகின்றனர். தனது நலனைப் பாதுகாக்கும் பார்ப்பனியத்தை, தனது நலனைப் பேணும் சுரண்டலை அறிவால் நிலைநாட்ட முடியாது. இங்கு விவாதம் என்பது அறிவுடன் நடத்தப்படுவதில்லை. சாதிய அமைப்பான பாhப்பனியத்தை, சுரண்டித் தின்னும் சுரண்டலை எந்த அறிவாலும் சரி என்று யாராலும் நிறுவ முடியாது.

விவாதத்தை இதற்குள் அவர்கள் நடத்த முன்வருவதில்லை. வெளியில், இதற்கு சம்பந்தமில்லாத வகையில், அவதூறு வடிவில் நடத்துகின்றனர். இதை மூடிமறைக்கவே தன்னை தூய ஜனநாயகவாதியாகவும், சுதந்திர நாட்டம் கொண்டவராகவும் காட்ட முனைகின்றனர்.

தன்னால் சுரண்டப்பட்ட அடுத்த நேர கஞ்சிக்கே வழியற்றவன், உன் சாதிய ஒடுக்குமுறையால் ஒடுக்கப்பட்ட தீண்டத்தகாத சாதியாக்கப்பட்டவனின், ஜனநாயகம் சுதந்திரம் பற்றி இவர்கள் வாய் திறக்கவே மாட்டார்கள். இதை செய்கின்றவனுக்கு எதிராக, அதை ஒழிக்கும் கம்யூனிஸ்ட்டுகளிடம் தான், தமது சுரண்டும் ஜனநாயகத்தை, சாதி கொண்டு வாழும் உரிமையையும் கோருகின்றனர். இதை அனைவரினரதும் உரிமை என்று சொல்லும் சதி தான், இவர்கள் போடும் ஜனநாயக முகமூடி. வேடிக்கை தான், ஆனால் இதுதான் இந்தியாவின் கிழிந்து தொங்கும் ஜனநாயகம். இதைத்தான், இந்த பார்ப்பனியமணிகள் பாதுகாக்க முனைகின்றனர்.

இந்த பார்ப்பனிய சதியை விரிவாக அறிய http://sampoogan.blogspot.com/


1 comment:

அசுரன் said...

//தன்னால் சுரண்டப்பட்ட அடுத்த நேர கஞ்சிக்கே வழியற்றவன், உன் சாதிய ஒடுக்குமுறையால் ஒடுக்கப்பட்ட தீண்டத்தகாத சாதியாக்கப்பட்டவனின், ஜனநாயகம் சுதந்திரம் பற்றி இவர்கள் வாய் திறக்கவே மாட்டார்கள். இதை செய்கின்றவனுக்கு எதிராக, அதை ஒழிக்கும் கம்யூனிஸ்ட்டுகளிடம் தான், தமது சுரண்டும் ஜனநாயகத்தை, சாதி கொண்டு வாழும் உரிமையையும் கோருகின்றனர். இதை அனைவரினரதும் உரிமை என்று சொல்லும் சதி தான், இவர்கள் போடும் ஜனநாயக முகமூடி. வேடிக்கை தான், ஆனால் இதுதான் இந்தியாவின் கிழிந்து தொங்கும் ஜனநாயகம். இதைத்தான், இந்த பார்ப்பனியமணிகள் பாதுகாக்க முனைகின்றனர். ///

Very Correct