தமிழ் அரங்கம்

Saturday, April 5, 2008

பார்ப்பனக்கூலி 'சுக்ரீவன்'எஸ்.வி.ராஜதுரையும் 'புதுவிசை'யும்........

பார்ப்பனக்கூலி 'சுக்ரீவன்'எஸ்.வி.ராஜதுரையும் 'புதுவிசை'யும்........

வாழ்ந்த காலம் முழுவதிலும் தான் சார்ந்த பார்ப்பனீயத்துக்கு காவடி தூக்கியாடிய பாரதி. இடையிடையே 'இடம், பொருள், ஏவல்' ஆகிய மூன்று சந்தர்ப்பவாத முறைகளையும் தவறாது பயன்படுத்தி அந்தந்த சூழ்நிலைகளுக்கேற்ப‌ சாதிய, பெண்ணீய கருத்துக்களையும் தேசவிடுதலைப் புராணங்களையும் பாடினான். அவ்வளவேதான், இதனைக்கொண்டே அவனை தேசிய‌க்கவியாகவும், மகாகவியாகவும் வானுயர உருவகப்படுத்தியதோடு, அவனை இலாவகமாக நம் அனைவரின் தலையிலும் ஏற்றிவைத்தது பார்ப்பனக்கூட்டம்.

பாரதி செத்தபிறகு, அவனை தம் அக்கிரகாரத்திற்கே உரிய நேர்த்தியுடன் மிகப்பிரமான்டமாக ஜோடித்து நம்ம 'காம்ரேடு'களின் தோள்களில் ஏற்றித் தெருத்தெருவாக ஊர்வலம் விட்டது குடுமி கம்பெனி. அந்த காலகட்டங்களில் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளோடு ஊடல் கொண்டிருந்த, அப்போதைய, 'சர்வகட்சி உறுப்பினர்' என்ற உயர்ந்த! அந்தஸ்த்தில் இருந்த 'மூத்த காம்ரேடு' ஜீவாவின் வாயாலேயே பாரதி புகழ் பாடவைப்பதன் மூலம், தந்தை. பெரியாரை அவதூறு செய்யமுடியும் என்று தீர்க்கமாக நம்பியது பார்ப்பனக் கூடாரம். ஜீவாவும் அந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொண்டார்.

'எதிரிக்கு எதிரி, நண்பன்' என்ற மாபெரும் கொள்கையினை மனதில் தாங்கியபடியே ஜீவா பார்ப்பனர்களின் கைப்பாவையாக மாறிப்போனார். வர்ணாசிரம குற்றவாளி் இராமனைப் பெரியார் எதிர்த்து இயக்கம் நடத்திய‌போது ஜீவா இராமனுக்கு துதிபாடுகின்ற இயக்கங்களை நடத்திக்கொண்டிருந்தார். அதன் நீட்சியாகத்தான் ஜீவா பாடிய பாரதிபுராணமும்.

அதன் விளைவாகத்தான் இன்று வரை போலிகம்யூனிஸ்டுகள் பாரதியைப் போற்றி பாடித்திரிகின்றனர். ஜீவாவைப்பற்றியே சரியான மதிப்பீடு செய்துகொள்ள விரும்பாத இந்த பிழைப்புவாதிகள், ஜீவாவால் கொண்டாடப்பட்ட பாரதியைப் பற்றியா பரிசீலிக்கப்போகிறார்கள்?!.

தொடர்ந்து பெரியாரிய கருத்துக்களை புறந்தள்ளிவந்த இந்த போலிக்கூட்டம், இப்போது தங்கள் இயக்கத்துக்குள்ளிருக்கும் சிலரது வாயாலேயே பெரியாரியக் கருத்துக்களை ஆதரித்துப்பேச அரிதாரம் பூசி இறக்கிவிட்டிருக்கிறது. அத்தகையவர்களில் ஒருவர்தான் 'தத்துவப்புலி' எஸ்.வி.ராஜதுரையும், 'தலித்படைப்பாளி' ஆதவன் தீட்சன்யாவும்.

நான் என்னுடைய முந்தைய ஒரு பதிவிலேயே குறிப்பிட்டிருந்த, ஆதவன் தீட்சன்யாவின் அதே (நான் ஒரு மநு விரோதன்) புத்தக வெளியீட்டுவிழாவில், அவருக்கு ஒரு கேள்வி வைக்கப்பட்டிருந்தது. கீற்று டாட் காம்(http://www.keetru.com/) என்ற இணைய தளத்தைச் சார்ந்த மிணர்வா, "எங்களுடைய இணையதளத்தின் சார்பில் நாங்கள் ஆதவனை நேர்கானல் செய்த போது பலவிதமான கேள்விகளுக்கும் நேர்மையாக பதிலலித்த அவர் (ஆதவன் தீட்சன்யா) பாரதி குறித்த அவரது மதிப்பீடு குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் பதிலலிக்க மறுத்துவிட்டார், அதுதான் ஏனென்று தெரியவில்லை" என்று குறிப்பிட்டுப் பேசினார்.

அதற்கு பதிலலிக்க வந்த ஆதவன் தீட்சன்யா, " பாரதி எந்தகாலத்திலும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கிடையாது. எனவே அவருக்கு வக்காலத்து வாங்கிப் பேசவேண்டிய அவசியம் இடது சாரிகளுக்கோ, த.மு.எ.ச.விற்கோ கிடையாது. இன்னும் சொல்லப்போனால் பாரதிதாசனைப்பற்றி எஸ்.வி.ராஜதுரை எழுதிய மிகக் கடுமையான விமர்சனக்கட்டுரையை எங்கள் 'புது விசை'யில் பதிவு செய்திருக்கிறோம். பாரதியைப் பற்றி மிகப் பிரமாண்டமான பிம்பம் ஒன்று இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு எதிராக மதிமாறன் போன்றவர்கள் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த விமர்சனம் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு என்னால் பாரதியைப்பற்றிய விமர்சனத்தை வைத்துவிடமுடியாது. அதை நான் முழுமையாக வாசித்த பிறகுதான் இதுபற்றிய கருத்தினை தெரிவிக்க முடியும்" என்று மழுப்பலாக பதிலலித்து அனைவருக்கும் நல்லபிள்ளையாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டார்.

தோழர். வே.மதிமாறன், ஆதவன் சொன்ன 'பாரதி என்ற மிகப்பிரமான்டமான பிம்பத்தை' தனது ஆய்வுகளின் மூலம் தகர்த்து எழுதிய "பாரதி'ய ஜனதா பார்ட்டி' என்ற தலைப்பிட்ட கட்டுரைகள் கடந்த ஏப்ரல்'2000 முதல் ஜனவரி'2001 வரை 'தலித்முரசு' இதழில் வெளிவந்திருக்கிறது. வேறெந்த பத்திரிக்கையும் இத்தகைய செய்திகளை வெளியிடத் தயங்கியபோது 'தலித்முரசு' செய்த இத்தகைய பணி மிகவும் பாராட்டுக்குரியது. அது நூல் வடிவிலும் இரண்டு பதிப்புகளாக வெளியிடப்பட்டு, பலவிதமான (நேர்மறையான/எதிர்மறையான) விமர்சனங்களையும் கடந்திருக்கிறது. பொங்கியெழுந்து ஆர்ப்பரித்துவந்த முற்போக்கு வேடமனிந்த பலவிதமான பாரதி அபிமானிகளின் கேள்விகளும் மதிமாறனின் ஆதாரப்பூர்வமான வாதத்தை எதிர்கொள்ளமுடியாமல் ஓடி ஒளிந்து கொண்டன.

மாபெரும் கம்யூனிஸ தலைவர்கள் முதற்கொண்டு அம்பேத்கர், பெரியார் வரை அனைவரும் பலமுறை இழிவுபடுத்தப்பட்ட போதும் உணர்ச்சியற்றுக்கிடந்த, த.மு.எ.ச.வின் முற்போக்கு வேடதாரிகள், பாரதியைப் பற்றிய விமர்சனத்தை பொறுக்கமாட்டாமல், உடனடியாக‌ மதிமாறனுடைய இந்த நூலுக்கு கண்டனக்கூட்டம் ஒன்றை திருவல்லிக்கேனி பாரதி இல்லத்தில் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதோ இத்தனையாண்டுகள் கழிந்த பின்னரும் ஆதவன் போன்ற முற்போக்கு(!)வாதிகள் 'முழுமையாக வாசித்துவிட்டு சொல்கிறேன்.....' என்று பசப்பிவருவது இவர்களது இயலாமையையே காட்டுகிறது. ஆனால் பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகளையும், பார்ப்பன இந்துமத எதிர்ப்பையும், வீரிய வித்துக்களாய் இம்மண்ணில் தனது கவிதைகளின் மூலம் விதைத்திட்ட புரட்சிக்கவி.பாரதிதாசனைப் பற்றி மட்டும் கடுமையாக‌ விமர்சிப்பதற்கு இவர்களால் முடிவது நமக்கு ஏளனத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

பொதுவுடைமை வாதிகளாக தங்களைக்காட்டிக் கொள்ளும் இவர்கள், பாரதி ரஷ்யாவைப்பாடியதாலேயே அவனை நேசிப்பதாகக் கூறும் இவர்கள், பொதுவுடைமையைப் பாடியபடி களத்தில் நின்ற‌ பாரதிதாசனை பாலியல் வக்கிரம் பிடித்தவனாக உருவகப்படுத்துகிறார்கள். இதிலிருந்தே இவர்களின் வேசைத்தனத்தை நாம் புரிந்துகொள்ளமுடியும்.

//////‘மங்கை ஒருத்தி தரும் சுகமும்,

எங்கள் மாத்தமிழ்க் கீடில்லை என்றுரைப்போம்’

தமிழை ஒப்பிடுவதற்குக் கவிஞரால் அதிகபட்சம் பார்க்க முடிந்தது ‘மங்கை ஒருத்தி தரும் சுகம்’ தான்!//////

என்று புதுவிசையில் எழுதுகிறார் ஒரு மாமாமாமாமாமா.....பெரும் எழுத்தாளப்புலி எஸ்.வி.ராஜதுரை. பாரதியின் பார்ப்பனச் சார்புநிலை அம்பலப்பட்டுக்கிடப்பதை, பாரதிதாசனை இழிவுபடுத்ததுவதன் மூலமாகஇவர் மறைத்துவிடத் துடிக்கிறார். அதற்கு பாரதிதாசனை பாலியல் வக்கிரம் பிடித்த எழுத்தாளர் என்ற அளவிற்கு கீழ்மைப்படுத்த முயற்சிக்கிறார்.

பார்ப்பனீய இந்து மதக் கருத்துக்களுக்கு எதிராக‌ இருந்திட்ட சித்தர்களைக்கூட பார்ப்பனர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்;

'இந்த‌ சித்தர்கள் பெண்களைப்பற்றி எப்படி தவறாகப் பாடியிருக்கின்றனர் பாருங்கள்' என்றுதான் அங்கலாய்த்தார்கள். மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில் வருகின்ற ஒரு பாடல் வரியில்கூட‌,

"பெண்கள் கூட்டம் பேய்களென்று பாடற்சொன்ன சித்தர்களும்,

ஈன்றதாயும் பெண்மையென்று எண்ணிடாத பித்தர்களே!"

என்று எழுதியவர் யார் தெரியுமா?

போகிற வருகிற இடங்களிலெல்லாம் பெண்களால் 'காலி' என்று அவமானப்படுத்தப்பட்ட 'வாலி'தான் வேறு யாருமல்ல‌. வாலியுடைய பெண்கள் மீதான அக்கரையைப் பற்றி நாம் புதிதாக எதுவும் கண்டுபிடித்துச் சொல்லத்தேவையில்லை. அது ஏற்கெனவே சந்திசிரிச்ச விஷயம் தான்.

பாரதியைக் காப்பாற்ற பார்ப்பனக்கூலி எஸ்.வி.ராஜதுரையும், சித்தர்களை இகழ்ந்த அதே பார்ப்பன வசனங்களை இப்போது பாரதிதாசன் மீது வாரியிறைக்கிறார். இவரும் அந்த வாலிக்கு சற்றும் சளைக்காத 'சுக்ரீவனின்' வேலையை மிகச்சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது தான் இதிலிருந்து நமக்குக் கிடைக்கின்ற செய்தியாக இருக்கும்.

பார்ப்பன எதிர்ப்பு என்ற ஒரு விஷயத்தைத் தவிர மற்ற எல்லா இந்துமத‌ விஷயங்களையும் ஏற்று செயல்பட்டுவந்த நீதிக்கட்சித் தலைவர்களைப்பற்றி மட்டும் சரியக பார்க்கத்தெரிந்த இந்த 'அறிவாளி' ராஜதுரை பாரதிதாசனை விமர்சிப்பதற்கு மட்டும் பார்ப்பனக்கண்களை இரவல் வாங்கிக்கொள்கிறார்.

'சரி பாரதிதாசன் மட்டும் என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா?' என்று கூட இவர்கள் திருப்பிக்கேட்கலாம். பாரதிதாசனைக் குறித்து இவர்களைவிட ஆழமான அழுத்தமான விமர்சனங்கள் எமக்கும் உண்டு. அவரைப் பற்றிய மிகச் சரியான விமர்சனம் என்று சொன்னால், பெரியாரின் சுயமரியாதைப் பாசறையில் இருந்துகொண்டே பார்ப்பனவெறி பிடித்த பாரதியை ஏற்றுச் செயல்பட்டதைச் சொல்லமுடியும். பாரதிதாசனின் இத்தகைய துரோகம் பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தின் செயல்களுக்கு பெருந்தடையாகவும் இருந்தது என்பதுகூட, அப்போதைய இயக்கத் தோழர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இருப்பினும் பாரதிதாசனுடைய பார்ப்பன எதிர்ப்புக் கருத்துக்களும் இந்துமத எதிர்ப்புச் செயல்களும்தான் அவரை ஏற்றுக்கொள்ளத் தூண்டுபவையாக இருக்கின்றன. பாரதியின் மொழிநடையினை மட்டும் வியந்து போற்றிட்ட பாரதிதாசன், தனது கவிதைகளில் பாரதியின் பார்ப்பனீயக் கருத்துக்களுக்குத் துளியும் இடம் கொடாமல், அதற்கு எதிரான‌ பெரியாரின் சிந்தனைகளைத்தான் வெளிப்படுத்தினார் என்பதுவும் பாரதிதாசனுடைய சிறப்பல்லவா?


"சீரங்க நாதனையும் தில்லைநடராசனையும்

பீரங்கி வைத்துப் பிளக்கும் நன்நாள் எந்நாளோ!"


என்ற இந்துமத எதிர்ப்புப் பாடல் வரிகளும்,


பார்ப்பான் பால் படியாதீர்; - சொற்குக் கீழ்ப் படியாதீர்;

பார்பபான்; தீதுறப் பார்ப்பான் கெடுத்துவிடப் பார்ப்பான் -

எப்போதும் பார்ப்பான் ஆர்ப்பான் நம் நன்மையிலே


ஆர்வம் மிக உள்ளவன்போல்! நம்ப வேண்டாம்

பார்ப்பானின் கையை எதிர் பார்ப்பானையே பார்ப்பான்


தின்னப் பார்ப்பான் தமிழன் பேர் சொல்லி மிகு

தமிழரிடைத் தமிழ்நாட்டில் வாழ்ந்திட்டாலும்


தமிழழித்துத் தமிழர் தம்மைத் தலை தூக்கா தழித்துவிட

நினைப்பான் பார்ப்பான் அமுதாகப் பேசிடுவான்


அத்தனையும் நஞ்சென்க நம்ப வேண்டாம்

தமிழர்கடன் பார்ப்பானைத் தரை மட்டம்


ஆக்குவதேஎன்றுணர்வீர்!

போன்ற பார்ப்பன எதிர்ப்புக் கருத்துக்களை வலியுறுத்தும் கவிஞரின் வீரிய வரிகளைப் போல் தமிழில் இதுவரை வேறெந்தக் கவிஞனும் பாடியதில்லை, என்பதை மறுக்கமுடியுமா?


"சித்திரச் சோலைகளே!

உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே .... முன்னர்

எத்தனைத் தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ

உங்கள் வேரினிலே!"


என்ற வரிகளில் பொதிந்திருக்கும்

உழைப்பாளிவர்க்கச் சிந்தனையைப் போல பாரதி எங்காவது பாடியிருக்கிறானா?

இந்து வெறியை தனது கவிதைகளின் மூலம் ஊட்டிவளர்த்திட்ட பாரதி விமர்சிக்கப்பட வேண்டியவரா?, அல்லது அதற்கும் அப்பாற்பட்டு கொண்டாடப்படவேண்டியவரா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நேரடியாக‌ பதிலலிக்காமல் ''நாங்கள் பாரதிதாசனை விமர்சித்திருக்கிறோம்'' என்று சொல்லும் பித்தலாட்டத்தைத்தான் அறிவுஜீவித்தனம் என்று சொல்லிக்கொள்கிறார்கள் இவர்கள்.

தலித் எழுத்தாளர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிற ஆதவன் தீட்சன்யாவோ, 'ஈன பறையர்கள்' என்று தலித் மக்களைத் தூற்றிட்ட பார்ப்பனவெறியன் பாரதியைப் பற்றி விமர்சிக்கப் பம்முகிறார். இதுதான் இவரின் தலித்பார்வையோ?

இன்றைக்கு பார்ப்பன பயங்கரவாதம் கொலைவெறியோடு அலைகின்ற சூழலில்கூட நமது மதிப்பிற்குரிய‌ முற்போக்கு(!)வாதிகளின் இத்தகைய பிற்போக்கு வாதங்கள், பார்ப்பனியத்துக்கு மேலும் வலுசேர்ப்பதற்காகவே அமைகின்றன. சிறிதும் வெட்கமின்றி, பாரதியைப்பற்றிய விமர்சனங்களுக்கு பதிலலிக்க வக்கற்ற இவர்கள், பாரதிதாசனை இகழ்வதன் மூலமாக சரிசெய்துவிடமுடியும் என்று பிறருக்குப் போதித்தும் வருகின்றனர். பாரதிதாசனை கடுமையாக விமர்சிப்பதைக் காட்டிலும், தங்களுடைய பாரதி ஆதரவு நிலைதான் பெரியாருக்கு இவர்கள் செய்யும் முழுத் துரோகமாகும். அறிவுலக நண்பர்கள் இதனைச் சரியாக அடையாளம் கண்டு உடனடியாக இந்த விமர்சனத்தைத் துவக்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

.......................................................................

தோழமையுடன்,

ஏகலைவன்.

குறிப்பு: இது குறித்த தனது கருத்துக்களை, சமீபத்தில் மக்கள் தொலைக்காட்சியில் நேர்கானல் அளித்த தோழர்.வே.மதிமாறன் அவர்களுடைய, அந்த வீடியோ பதிவு இப்போது அவருடைய வலைதளத்தில்(http://mathimaran.wordpress.com/) வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர்வமிருப்பவர்கள், இதற்காக ஒரு பதினைந்து நிமிடம் மட்டுமாவது செலவிட முடிந்தவர்கள், இதனை எந்த இன்டெர்நெட் சென்டரிலும் சென்று பார்க்க முடியும்.

2 comments:

Unknown said...

பொறிக்கி முண்டம்,

உனக்கு வேற வேலை கிடையாதா?

தமிழரங்கம் said...

உன்னைப் போன்ற பார்ப்பான பொறுக்கிகளை, மற்றவன் உழைப்பின் தின்னுகின்ற உன்னைப் போன்றவர்களையும் கறுவருபது தான் வேலை.