தமிழ் அரங்கம்

Tuesday, June 3, 2008

குஜராத் : இந்து பயங்கரவாத்தின் இன்னொரு முகம்

மோடி ராஜ்ஜியத்தில் 'இந்த"ப் பெண்களுக்கும் பாதுகாப்பு கிடைக்காது என்பதை குஜராத்தில் நடந்துவரும் பாலியல் வன்முறை சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

இந்துவெறி பாசிச பயங்கரவாதி மோடியின் ராமராஜ்ஜிய பேயாட்சிக்கு பாசிச ""துக்ளக்'' சோ விழா எடுத்துப் பாராட்டுகிறார் என்றால், அக்ரஹாரப் பத்திரிகையான ""கல்கி''யோ, தொடர்ச்சியாக மோடி சிறப்பிதழ் வெளியிட்டுத் துதிபாடுகிறது.

மோடி என்றாலே குஜராத்தில் நிலவும் பாசிச பயங்கரவாத ஆட்சியும், முஸ்லீம் இனப்படுகொலையும்தான் நாட்டு மக்களுக்கு நினைவுக்கு வரும். இவற்றை மூடி மறைத்துவிட்டு, அந்நிய முதலீட்டைப் பெறுவதிலும் தொழில் வளர்ச்சியிலும் அம்மாநிலம் முன்னோடியாகத் திகழ்ந்து, மோடியின் ஆட்சியில் ""ஊக்கமிகு குஜராத்''தாக மாறிவிட்டதென்று அப்பத்திரிகைகள் ஏற்றிப் போற்றுகின்றன. ஆனால், பார்ப்பனப் பத்திரிகைகளால் ஏற்றிப் போற்றப்படும் குஜராத்தில் அண்மையில் தாழ்த்தப்பட்ட மாணவி மீது நடத்தப்பட்ட வன்புணர்ச்சிக் கொடூரத்துக்கு எதிராக அம்மாநில மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களைத் தொடுத்து, மோடி ராஜ்ஜியத்தின் யோக்கியதையை நாடெங்கும் திரைகிழித்துக் காட்டியுள்ளனர்.

வட குஜராத்தில் உள்ள பதான் நகரின் அரசு ஆசிரியைப் பயிற்சிக் கல்லூரியில் படித்து வந்த தாழ்த்தப்பட்ட மாணவி ஒருவரை (எதிர்கால நலன் கருதி அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை), அக்கல்லூரியின் பேராசிரியர்கள் 6 பேர் அவரை மிரட்டிக் கூட்டாகப் பாலியல் வன்புணர்ச்சி செய்து வந்திருக்கின்றனர். ""தேர்வுகளில் அகமதிப்பீட்டு மதிப்பெண்களைக் குறைத்து விடுவோம்'' என்று மிரட்டியே கடந்த 6 மாதங்களில் 14 முறை அக்கல்லூரியின் கணினிக் கூடத்திலும், ஆய்வுக் கூடத்திலும் வைத்து வன்புணர்ச்சியை ஏவியுள்ளனர்.
.

No comments: