தமிழ் அரங்கம்

Thursday, July 31, 2008

பாரிசில் நடந்த '1983-2008 நெடுங்குருதி" கூட்ட ஏற்பாட்டாளர் நடத்திய துப்பாகிச் சூடும், பேரினவாத அரசுக்கு ஆதரவான கூட்டமும்

அ.மார்க்ஸ் என்ற மார்க்சிய விரோதி, ஏகாதிபத்தியம் முன்வைக்கும் தேசிய எதிர்ப்பை தேசிய விரோதத்துடன் வாந்தியெடுக்க, பாசிச பேரினவாதத்தைப் பலப்படுத்தும் ஒரு புலியெதிர்ப்பு அரசு சார்புக் கூட்டமாக அது அரங்கேறியது. இந்த இந்தியப் பிரமுகர்கள் ஓசியில் சுற்றுப் பிரயாணம், ஒசி குடியில் அரசியல் விபச்சாரம் செய்ய வாய்ப்பளிக்கும் கூட்டத்தில், ஒருவரை படுகொலை செய்ய முயன்ற மனித உரிமை மீறல் மேல் எந்தக் கண்டனமுமின்றி அ.மார்க்ஸ் தனது அரசியல் வங்குரோத்தை அரங்கேற்றினார். அ.மார்க்ஸ் இந்தியாவில் மனிதவுரிமைக்கான ஒரு கண்காணிப்பு அமைப்பில் இருப்பதும், இங்கு அவ்வுரிமையை மீறுவோர் கூட்டத்தில் பங்கு கொண்ட போக்கிலித்தனத்தை என்ன என்பது. அத்துடன் கூட்டமே பேரினவாத அரசு சார்புக் கூட்டம். சோபாசக்தி, சுகனினதும் அரசியல் விபச்சாரத்தில், விபச்சாரம் செய்வது தான் அ.மார்க்ஸ்சின் அரசியலாகும்.

No comments: