தமிழ் அரங்கம்

Sunday, July 27, 2008

புலி பாசிசத்தின் முடிவும், பேரினவாத பாசிசத்தின் ஆக்கிரமிப்பும்

புலிகளின் அழிவு எப்படித்தான் சாத்தியமாகின்றது யாரும் இன்னமும் நம்பாத, நம்பமுடியாத வேகத்தில் நடக்கின்றது. புலிகளிடம் பாரிய படை உண்டு. அதே ஒர்மமும் உண்டு. ஆனால் யுத்தத்தில் நிற்க முடியவில்லை. ஒவ்வொரு பிரதேசம் பிரதேசமாக இழக்கப்படுகின்றது.

அன்று ஒவ்வொரு பிரதேசமும் புலிகளால் பிடிக்கப்பட்ட போது ஆர்ப்பரித்து கூத்தாடிய கூட்டம், இன்று ஒப்பாரி கூட வைக்காமல் புலியைப் புதைக்கின்றனர். எதுவும் நடவாத மாதிரியும், தமக்கு எந்த சம்பந்தமுமில்லாத மாதிரியும் காட்டிக்கொண்டு, புலியை திட்டித் தீhப்பதும் இழிவாடுவதும் மெதுவாக வெளிப்படுகின்றது. புதிய அரச ஆதரவுக் கும்பல் ஒன்று, இங்கிருந்து புற்றீசல் போல் உருவாகின்றது.

இந்தக் கும்பலின் சுயநலத்துடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள், கூத்துகள், வக்கிரங்கள் மனிதத்தை சாகடிக்க வைத்தது. போராட்ட உணர்வையும், உணர்ச்சியையும் உறிஞ்சிக் குடித்தது. சுயநலம் புலித்தேசத்தின் நெம்புகோலாக, அவை வீங்கி வெம்பியது. இது மலிவாக மலினமாக, இதை புலித்தேசியமாக ஊட்டப்பட்டது.

இங்கு உண்மையும், மனித வாழ்வும் புதைக்கப்பட்டது. மனித அழுகுரல்கள் புலித் தேசிய இசையாக்கப்பட்டு அதற்கு ஏற்பவே பாசிச நடனமாடப்பட்டது.

எல்லாம் சரியாக இருப்பதாக காட்டப்பட்டது, நம்பப்பட்டது. ஆம் இது போலியான அடுக்குமாடிக் கட்டிடம் என்பது, யாரால் தான் நம்பமுடியும்? நாம் மட்டும் தான் இதை அரசியல் ரீதியாக, இதன் பொய்யான விம்பத்தை முன் கூட்டியே முன் அறிவிக்க முடிந்தது.

முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: