தமிழ் அரங்கம்

Sunday, October 5, 2008

பிள்ளைக்கறி தின்னும் பிரிமியர் மில்!முதலாளியின் இலாபவெறிக்கு இளம்பெண் உயிர்ப்பலி!

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தை அடுத்துள்ள சுண்டகாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், கிருஷ்ணவேணி என்ற இளம்பெண். கூலி விவசாயி நடராஜ் என்பவரின் மகளான இவர் ஓசூர் வட்டம் பாகலூரை அடுத்துள்ள பெலத்தூர் பிரிமியர் மில்லில் சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் கொத்தடிமையாக வேலையில் சேர்க்கப்பட்டார். தினமும் 16 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கி, கிருஷ்ணவேணியை 3 மணிநேரம் கூடத் தூங்க விடாமல், அவசர வேலை என்று மிரட்டி ஆலை நிர்வாகம் அவரைக் கசக்கிப் பிழிந்துள்ளது.


இதனால் தூக்கமின்மை, சோர்வு, தலைவலி, மாதவிடாய்க் கோளாறுகள் உள்ளிட்ட பல உடல் உபாதைகளால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதை மறந்து ஓய்வு கிடைக்கின்ற 34 மணி நேரத்தில் நன்றாகத் தூங்குவதற்காக ஆலை நிர்வாகமே தூக்க மாத்திரை போட்டுக் கொள்ளப் பழக்கப்படுத்தியுள்ளது.

தினமும் 16 மணி நேரத்துக்கு மேல் கடின உழைப்பு,.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: