தமிழ் அரங்கம்

Thursday, October 30, 2008

கவர்ச்சித் திட்டங்கள் : வறுமையை ஒழிக்குமா?

வறுமை காரணமாக தனது குழந்தைகளை அடுத்தடுத்து கிணற்றில் தள்ளி தானும் தற்கொலை செய்து கொண்ட நல்லதங்காள் கதை இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அத்துயரக் கதை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதத்தில் சேலம் அருகே வறுமை காரணமாக தான் பெற்று வளர்த்த மூன்று குழந்தைகளை கிணற்றில் தள்ளி தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார் ஒரு இளம்பெண். மூன்று குழந்தைகளும் மாண்டுபோக, அவர் மட்டும் காப்பற்றப்பட்டு வேதனையில் விம்மிக் கொண்டிருக்கிறார்.


வறுமையின் கொடுமையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இது ஏதோ விதிவிலக்கான துயரச் சம்பவம் என்று ஒதுக்கி விடவும் முடியாது. இன்று அந்த மூன்று குழந்தைகள்; நாளை...? ஒருவரல்ல, இருவரல்ல; தமிழகத்தில் பாதிப்பேர் வறுமையில் உழலும் ஏழைகள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை அளித்திருக்கிறது, உலக வங்கியின் புள்ளி விவர அறிக்கை.

உலக வங்கியும் ஆசிய வளர்ச்சி வங்கியும் உலகளாவிய வறுமை குறித்த புதிய ஆய்வுகளை மேற்கொண்டு புள்ளி விவர அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள அளவுகோலின்படி ஒரு டாலருக்கும் கீழான வருமானம் உள்ளவர்கள் ஏழைகள் என்று உலக வங்கி வரையறுத்தது. ஒரு மனிதனுக்கு உயிர் வாழத் தேவையான, குறைந்தபட்சம் 2100 கலோரிகள் சத்து தரும் உணவை வாங்குவதற்கு எவ்வளவு தொகை தேவையோ அதை அடிப்படையாக வைத்து, சராசரியாக 1.25 டாலருக்கும் (ரூ.55) குறைவான வருமானமுள்ளவர்களை வறுமைக் கோட்டுக்குக்.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: