தமிழ் அரங்கம்

Friday, October 31, 2008

தமிழ்மக்கள் இராணுவப் பகுதிகளில் வாழ்வதையே விரும்புகின்றனரே ஏன்!?


மறுபக்கத்தில் தமிழனை இராணுவம் வெட்டுகின்றான் கொத்துகின்றான் என்ற, பிரச்சாரத்தை புலிகள் செய்கின்றனர். இருந்தபோதும் தமிழ்பேசும் மக்கள் புலிகளுடன் வாழ்வதைவிட, சிங்கள பகுதியில் வாழ்வதையே விரும்புகின்றனர். புலிகளிடம் இருந்து தப்பிச்சென்ற பெரும்பான்மை தமிழ் இனம், சிங்களப் பகுதிகளில் தான் வாழ்கின்றனர். புலிகளின் பகுதிகளில் வாழ்பவர்கள், தப்பிச்செல்ல வழியின்றியும், பொருளாதார ரீதியாக வேறு பிரதேசத்தில் வாழ முடியாதவர்களும் தான் எஞ்சியுள்ளனர். இவர்களும் சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பிச்செல்லவும், புலிகளுடன் சோந்து வாழவிரும்பாத எதிர்மனப்பாங்குடன் தான் வாழ்கின்றனர்.

இதுவே இன்றைய எதார்த்தம்;. யுத்தம் கடுமையாகி, புலிகளின் அழிவை தீர்மானிக்கின்ற இக்கட்டான நிலைக்குள், புலிகளின் பாசிசம் பேரினவாதத்தைப் பலப்படுத்தியுள்ளது. புலிகள் தப்பிப்பிழைக்க, எஞ்சியுள்ள மக்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்துவதை புலிகளின் பாசிசம் வழிகாட்டுகின்றனர். யுத்த சூழலை விட்டு தப்பிச்செல்லாத வண்ணம், மக்கள் பலாத்காரமாகவே துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். மக்களிடம் இருந்து அன்னியமான யுத்தத்தில், தமிழ்மக்கள் வலுக்கட்டாயமாகவே பலியிடப்படுகின்றனர்.

பேரினவாதம் குண்டுகள் பொழிந்து அப்பாவித்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: