தமிழ் அரங்கம்

Monday, October 13, 2008

ஈழத் தமிழ்மக்கள் துயரத்தில் பிழைக்கும், தமிழக அரசியல்வாதிகள்

அன்று முதல் இன்று வரை இதுதான் கதை. இவர்கள் எப்போதெல்லாம் தலையிட்டார்களோ, அப்போதெல்லாம் ஈழத் தமிழ் மக்களின் துயரம் பெருகியது. இந்தியா தலையிட வேண்டும் என்று இன்று மீண்டும் கூச்சல் போடுபவர்கள், முன்பும் இதுபோல் கூச்சல் இட்டனர். இதன்போது தமிழ் இனத்தையே இந்தியா கொன்று குவித்தது. மறுபடியும் பிழைப்புவாதிகள், ஈழத் துயரத்தை வைத்து தமது சொந்த அரசியலைச் செய்கின்றனர். 

 

பேரினவாதமோ புலியொழிப்பின் பெயரில், ஒரு முழு யுத்தத்தையே தமிழ்மக்கள் மேல் நடத்துகின்றது. ஒருபுறம் புலிப் பாசிட்டுகள் திணறுகின்றனர். மறுபக்கம் தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரத்தையும் மனித அவலத்தையும் சந்திக்கின்றனர்.

 

புலிகளால் கட்டாயப்படுத்தி சண்டையில் ஈடுபடுத்தப்படும் பலர் நாள்தோறும் கொல்லப்படுகின்றனர். மறுபக்கத்தில் இராணுவக் களையெடுப்பில் பலர் (பெருமளவில் புலிகளும், சிறியளவில் அப்பாவிகள்) காணாமல் போகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். புலிப் பிரதேசத்தில் இருந்து தப்பமுனைவோருக்கு சித்திரவதை முதல் மரணம் வரையான தண்டனையே, வாழ்வின் விதியாகின்றது. தமிழ் இனத்தின் குழந்தைகள், பல வழியில்  பலரால் அழிக்கப்படுகின்றனர்.

 

யுத்தத்தில் சிக்கி தவிக்கும் மக்கள் எந்த சொந்த முடிவையும் சுயமாக எடுக்கமுடியாது,  அவர்கள் மரணத்தின் விளம்பில் நிற்கின்றனர். யுத்த முனையில் இருந்து தப்பிச் செல்ல முடியாத வகையில், அவர்கள் மனித கேடயமாக்கப்பட்டுள்ளனர்.

 

மக்களை அங்கிருந்து வெளியேறா.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்


No comments: