தமிழ் அரங்கம்

Thursday, January 15, 2009

வழக்குரைஞர்கள் சங்கமா? ஆர்.எஸ்.எஸ். கூடாரமா?

"மும்பய் தாக்குதலின்பொழுது உயிருடன் பிடிபட்ட முசுலீம் தீவிரவாதி முகமது அஜ்மலின் மீதான வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடைபெற வேண்டும். அவருக்காக வக்கீல் ஆஜராகவில்லை என்றால், அது மனித உரிமை மீறலாகிவிடும். இதற்காக அஜ்மலுக்காக ஆஜராக நான் தயார். இதற்காக பாகிஸ்தான் தூதரகம் என்னை அணுக வேண்டும். ஆனால், அஜ்மலைத் தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியாது'' என அறிவித்திருந்த மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் மகேஷ் தேஷ்முக்கின் வீட்டையும் அலுவலகத்தையும் சிவசேனா குண்டர்கள் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளனர். அதே சமயம், அஜ்மலுக்காக வாதாட முன்வந்த மற்றொரு வழக்குரைஞர் ப.ஜனார்த்தன் சிவசேனா குண்டர்களால் தாக்கப்படவில்லை. அவர் ஓய்வு பெற்ற "அட்வகேட் ஜெனரல்'' என்பதுகூட அவரின் "அதிருஷ்டத்திற்கு''க் காரணமாக இருக்கலாம்.

இந்து மதவெறி பிடித்த சிவசேனா குண்டர்களின் இந்தத் தாக்குதலைப் பத்தோடு பதினொன்றாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. சிவசேனாவின் இந்தச் சட்டவிரோதமான மிரட்டல் நடவடிக்கையை நகர்ப்புறத்தைச் சேர்ந்த நடுத்தர, மேல்தட்டு "இந்துக்கள்'' மனநிறைவோடு ஆதரிக்கிறார்கள் என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது. மேலும், பல்வேறு வழக்குரைஞர் சங்கங்கள் அஜ்மலுக்காக யாரும் வாதாடக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்பொழுதுள்ள............

No comments: