தமிழ் அரங்கம்

Tuesday, January 13, 2009

இந்தியாவும் தமிழீழமும்


தோல்விக்கான காரணத்தை இராணுவபலம், அன்னிய சக்திகளின் உதவி என்று கூறி நிற்கின்றனர். ஒரு விடுதலை போராட்டத்தை இவர்கள் இன்று பட்டியலிடும் அத்தனை சக்திகளும் ஒடுக்குவார்கள். இதைத் தெரிந்திருக்க வேண்டியது தான் ஒரு விடுதலை இயக்கத்தின் அடிப்படை கூட. அப்படி தெரியாமல், எப்படி போராட முடியும். ஏகாதிபத்தியம் முதல் உள்ளுர் நிலப்பிரபுக்கள் வரை, தேசியத்தின் எதிரி என்பதை சொல்லாத போராட்டம், அவர்களைச் சார்ந்து நின்றது. இப்படி மக்களைச் சார்ந்து நிற்காத வண்ணம் எதிரியைச் சார்ந்து போரட்டத்தை நடத்தியவர்கள், இன்று அவர்களால் அழிகின்றனர்.

இந்த உண்மை உணரப்படாத நிலையில், உணர்த்தப்படாத நிலையில், அறியாமையில் நாம் வாழ்கின்றோம். அன்னிய சக்திகளின் தயவில் அன்று மக்களை தோற்கடித்த போராட்டம், இன்று மக்கள் தோற்கடிக்கும் போராட்டமாகியது. இப்படி அழுகி நாறும் வெற்றுடலைத்தான், பேரினவாதம் இந்தியா துணையுடன் அகற்றுகின்றது. மக்கள் புலிகளை தோற்கடித்தனர் என்ற உண்மையை மறுக்கும் மக்கள் விரோத அரசியல் மூலம், இன்றும் தம் தோல்வியையும் தவறுகளையும் மூடிமறைக்கவே முனைகின்றனர். தம் அடையாளமே இருக்கும் வரை, தமது தவறை தவறாக ஒருநாளும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை.

இன்று இந்தியா இலங்கை அரசுடன் சேர்ந்து புலிகளை தமிழ்மக்கள் மத்தியில் இருந்து அகற்றுகின்றனர் என்பதே உண்மை.

இங்கு இதை பல தளத்தில் காணமுடியும். புலிகள் எந்த அரசியல் அடிப்படையுடனும் தமிழ் மக்களுடன பிணைந்திருக்கவில்லை............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: