தமிழ் அரங்கம்

Monday, February 16, 2009

யூத இனவெறி பயங்கரவாதப்பேயாட்டம்

பாலஸ்தீன மக்களின் மீது நடத்தி வரும் ஆக்கிரமிப்புப் போரையும், முற்றுகையையும் கிறிஸ்துமஸுக்குப் பிறகு இசுரேல் மீண்டும் தீவிரப்படுத்தியிருக்கிறது. இசுரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இடையே கையெழுத்தான "ஆஸ்லோ'' சமாதான ஒப்பந்தத்தின்படி பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட காசா முனையைத்தான் இப்பொழுது இசுரேல் குறிவைத்துத் தாக்கி வருகிறது.

காசா முனை மூன்றுபுறம் இசுரேலையும், மற்றொருபுறம் எகிப்தையும், மத்தியத்தரைக் கடலையும் எல்லையாகக் கொண்ட, 270 சதுர கிலோமீட்டரே பரப்புடைய சிறிய நிலப்பரப்பாகும். காசா முனையில் இருந்து ஒரு பொருள் வெளியேற வேண்டும் என்றாலோ அல்லது அத்தியாவசியப் பொருட்கள் காசா முனைக்கு உள்ளே வர வேண்டும் என்றாலோ, அதற்கு இசுரேலின் அனுமதி கிடைக்க வேண்டும். இவ்வளவு ஏன், காசா முனையைச் சேர்ந்த ஒரு பாலஸ்தீனர், பாலஸ்தீன சுயாட்சிப் பிரதேசமான மேற்குக் கரையில் வாழும் மற்றொரு பாலஸ்தீனரையோ, தனது உறவினரையோ சந்திக்க வேண்டும் என்றால்கூட, இசுரேலின் அனுமதியைப் பெற வேண்டும். அந்தளவிற்கு காசா முனை இசு ரேலின் முற்றுகையின் கீழ் இருந்து வருகிறது. அதனால்தான் காசா முனை உலகின் மிகப் பெரிய திறந்தவெளி சிறைச்சாலை என்றே அழைக்கப்படுகிறது. இசுரேலின் இக்காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஊடாகத்தான் 15 இலட்சம் பாலஸ்தீனர்கள் காசா முனையில் வாழ்ந்து வருகின்றனர்.

போர் என்றால்கூட இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மட்டும்தான் தாக்க வேண்டும் என்கிறது, சர்வதேசச் சட்டம். ஆனால், வீடுகள், குடியிருப்புப் பகுதிகள், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகக் கட்டிடங்கள், மின் நிலையங்கள், குடிநீர் இறைக்கும் நிலையங்கள், கழிவுநீர் சுத்திகரிக்கும்...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: