தமிழ் அரங்கம்

Wednesday, June 17, 2009

ரமாபாய் நகர் துப்பாக்கிச்சூடு தீர்ப்பு: தானாகக் கனியவில்லை !


இந்து மதவெறிக் கும்பல் ஆட்சியிலிருப்பதைச் சாதகமாக்கிக் கொண்டு “யாரோ” சில சமூக விரோத சக்திகள் அக்காலனியில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து அவமானப்படுத்தினர். ஆதிக்க சாதி திமிர் பிடித்த அக்கிரிமினல்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்கக் கோரி ரமாபாய் நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் உரிமைக்காகப் போராட்டத்தில் இறங்குவதை இந்து மதவெறிக் கும்பலால் சகித்துக் கொள்ள முடியுமா? சட்டம்ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அப்போராட்டத்தை ஒடுக்கியது, இந்து மதவெறிக் கூட்டணி அரசு.

No comments: