தமிழ் அரங்கம்

Sunday, December 27, 2009

"மே18"காரர்கள் புலியிடம் கோருவதையே, குழையடித்து அரசியல் செய்யும் அனைவரிடமும் கோருகின்றோம்

"மே 18" இயக்கம் புலிகளிடம் விமர்சனம் சுயவிமர்சனத்தைச் செய்யக் கோருகின்றனர். இதை புலிகள் செய்யாமல் இருத்தலும் மறுப்பதும் "அயோக்கியத்தனம்" என்கின்றனர். இதை நாம் இவர்களிடம் கோரும் போது, அதைக் கோருவதே தவறு என்கின்றனர். கடந்த 30 வருடமாக, புலிகளுக்கு வெளியில் நடந்த மனிதவிரோத அரசியலைப்பற்றி பேசுவதும் கோருவதும் அரசியல் ரீதியாக மறுதலிக்கப்படுகின்றது. இதில் சம்மந்தப்பட்டவர்கள் எல்லாம் ஒன்றாக கூடி குழையடித்து, ஒரு எதிர்ப்புரட்சி அரசியலை மீளவும் எம்முன் முன்தள்ள முனைகின்றனர்.

கடந்தகாலத்தில் மக்களுக்கு எதிராகப் "போராடியவர்கள்", மக்களுக்கு ஏற்படுத்திய சமூக விரோதக் கூறுகளைப் பற்றி பேசுவது அவசியம். அன்றும் இன்றும், இது தொடர்ந்து மறுக்கப்படுகின்றது. சிலர் இன்று புலியிடம் மட்டும் கோருவது போல், இதை நாம் கோர முடியாது. அப்படி கோருகின்ற அரசியல், தம்மை மூடிமறைத்த சந்தர்ப்பவாதமாகும். இன்று இதுவே மீண்டும் எதிர்ப்புரட்சி அரசியலாக, மேலோங்கி வருகின்றது.

புலிகள் மட்டும் மக்களை கொன்று புதைக்கவில்லை. புலியல்லாத இயக்கங்கள் முதல் இயக்கத்துக்கு மாற்றாக மாற்று அரசியல் செய்தோர் வரை, தங்கள் மக்கள் விரோத அரசியல் மூலம் மக்களை ஓடுக்கினர், ஓடுக்கவுதவினர். இக்காலத்தில் "மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின்" பெயரில் இயங்கிய புதிய ஜனநாயகக் கட்சி கூட, பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடியது கிடையாது. குரல் கொடுத்ததும் கிடையாது.

புலிகள் செத்த பின்பு, வரிந்து கட்டிக்கொண்டு புலிக்கு அந்தியேட்டி நடத்த முனைகின்றனர். இதன் மூலம் தமக்கு துடக்கு கழித்து,.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: