தமிழ் அரங்கம்

Saturday, January 9, 2010

பிரபாகரனின் தந்தையின் உடல் மூலம், மகிந்தா முன்னெடுக்கும் பிண அரசியல்

செத்த பிணத்தில் இருந்து உண்ணி விலகிச் செல்வது போல், தமிழ் தேசிய அரசியல் இன்று புதிய உடலைத் தேடுகின்றது. பிரபாகரனின் மரணம் மூலம் புலி மடிந்தபோது, அதை அண்டிப் பிழைத்து வாழ்ந்த தமிழ் தேசிய உண்ணிக் கூட்டம் தன் வக்கிரமான சொந்த பிழைப்புவாதக் குணத்தைக் காட்டுகின்றது. அது தொடர்ந்து தமிழன் இரத்தத்தைக் குடிக்க, புதிய உடல்களைத் தேடியோடுகின்றது.


இப்படி தமிழ் தேசியம் வெட்கப்படத்தக்க வகையில், பேரினவாதத்தின் நுகத்தடியை முத்தமிடுவதுதான் தமிழனின் ஓரே தீர்வு என்கின்றனர். ஒரு இனத்தை கொன்று குவித்தவர்கள், இனவழிப்பை ஒரு யுத்தமாக நடத்தியவர்களை, நம்பக் கோருகின்றனர். இதன் மூலம் சர்வதேச ரீதியாக யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்று அடையாளம் காணப்படுபவர்களைக், காப்பபாற்றும் முயற்சியில், தமிழ்தேசிய உண்ணிக் கூட்டம் இன்று தன் வர்க்க வக்கிரங்களுடன் களத்தில் குதித்துள்ளது. யார் எங்கு எப்படி இரத்தம் குடிக்கலாம் என்று, கணக்குப் பிசகாத அரசியல் மூலம், தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வழிகாட்டுவதாக பீற்றிக்கொள்கின்றது.

நடைபெறும் பேரினவாத தேர்தல் மூலம் சர்வதேச பேரினவாத குற்றவாளிகளை பாதுகாக்கும், வக்கிரமான முயற்சியில் பலர்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: