தமிழ் அரங்கம்

Monday, September 26, 2005

சிவபெருமானின் ஆணாதிக்கம்

சிவபெருமான் உமாதேவியாருக்கிடையில் நடந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து அதில் முடிவின்றி நீடித்ததால், நாட்டியத்தை ஆடுகின்றனர். நாட்டியத்தை சிவபெருமான் தொடர முடியாததால் திடீரென ஒருகாலை பூமியிலும் மறுகாலை விண்ணிலும் வைத்து ஆடுகின்றார். இதில்தான் உமாதேவியார் காலைதூக்கி வைத்து ஆடுவது, பெண்ணின் ஒழுக்கமல்ல என்பதால் தோற்கின்றார்.

இங்கு ஏன் உமாதேவியார் காலை துக்கிவைத்து ஆடமுடியாது என்ற கேள்விக்கு, ஆணாதிக்க அமைப்பு பெண்ணின் மீதான ஒழுக்க கோவையால் கட்டுபடுத்துகின்றது. ஏன் சிவபெருமான் போட்டியைக் குழப்பி அத்துமீறி காலை கீழ் நோக்கி வைத்து, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கின்றார். இது அதர்மமான நடத்தையல்லவா?.

ஓரே நிலையில் உமாதேவியரோடு போட்டியிட்டு வெல்ல முடியாத நிலையில்தானே, அடுத்த கட்டத்தை சிவபெருமான் தொடங்குகின்றார். வென்றது உமாதேவியார் அல்லவா!. ஆணாதிக்க ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்டு அல்லவா, சிவபெருமனின் வெற்றி ஏற்க்கப்படுகின்றது. ஆனால் ஆணாதிக்க அமைப்பு உமாதேவியார் வெற்றியை மறுக்கின்றது.

ஆணாதிக்க அமைப்பில் தோற்ற உமாதேவியாரின் ஆணவத்தை அடக்க, சிவன் பூலோகம் சென்று வாழ சாபம் ஈடுகின்றார். அப்போதும் உமாதேவியாரின் துணையாக முருகன் (மகன்) அனுப்பப்படுகின்றான்.

பெண் ஆணுக்கு அடங்கி பாதுகாப்பு பெற்று வாழமுடியுமே ஒழிய, சுதந்திரமாக வாழும் உயிரல்ல என்பதைதான், ஆணாதிக்ககதை தனது சமூக இருப்பை நோக்கி புனைந்து காட்டுகின்றது.

------------------------------------------------------------------------
தமிழ் மணத்தில் பதிவளராக இல்லாதவர்கள் தமது கருத்துகளை தெரிவிக்க விரும்பின், tamil_circle@yahoo.no என்ற இந்த ஈ-மெயில் மூலம் உங்கள் கருத்துகளை எமக்கு அனுப்பின் நாம் அதை பதிவிலீட முடியும்.

விரிவான கட்டுரைக்கு www.tamilcircle.net

No comments: