தமிழ் அரங்கம்

Sunday, September 25, 2005

மக்களுக்கு மறுப்பது எதை

1986 இல் யாழ் பல்கலைகழக மாணவர்கள் சகல இயக்கத்திடமும் சில கோரிக்கையை முன்வைத்து ஒரு போராட்டத்தை நடத்தினர். இதுவே மட்டக்களப்பைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவனான விஜிதரன் கடத்தப்பட்டு காணமல் போன நிலையில், விடுதலை செய்யக் கோரி நடந்தப்பட்ட போராட்டமாகும். அந்தப் போராட்டத்தில்

1. "மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்"
2. "மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்."

என பல்கலைக்கழக மாணவர்கள் கோரினர். இதை அன்று வடக்கில் இயங்கிய சுதந்திரமான மக்கள் அமைப்புகள் ஆதாரவளித்து, அவர்களும் போராட்டங்களில் பங்குபற்றினர்.

இந்தக் கோரிக்கைக்கு பகிரங்க துண்டுப் பிரசுரம் மூலம் 28.11.1986 இல் புலிகள் பதிலளித்தனர்.

அதில் இது "..விடுதலைப் புலிகளை அரசியல் அனாதைகளாக்கக் கூடிய மேலும் இரு கோரிக்கைகள்" என்று கூறி அதை வழங்க முடியாது என்றனர்.

மக்களின் போராட்டமல்லாத புலிப் போராட்டத்தை பாதுகாக்கும் இப்பதில், மக்களுக்கு எதைத் தான் வழங்கியது. மக்களுக்கு மேல் சர்வாதிகாரமும் அடக்கு முறையையும் தான் பதிலாக அளித்தனர். இதுவே இன்று வரையான அவர்களின் தீர்ப்பு. புலிகள் மக்கள் என்று வாய்கிழய பினாற்றுவது, அவர்களின் அடிமைத்தனத்தின் விலங்குகள் உடையாது பாதுகாக்கும் கவசம் மட்டும் தான்.

--------------------------------------------------------------------------------
தமழ் மணத்தில் பதிவளராக இல்லாதவர்கள் தமது கருத்துகளை தெரிவிக்க விரும்பின், tamil_circle@yahoo.no என்ற இந்த ஈ-மெயில் மூலம் உங்கள் கருத்துகளை எமக்கு அனுப்பின் நாம் அதை பதிவிலீட முடியும்.

விரிவான கட்டுரைக்கு http://www.tamilcircle.net/

No comments: