தமிழ் அரங்கம்

Friday, September 30, 2005

பெண்ணும் கிறிஸ்தவமும்

கிறிஸ்துவத்தின் பழைய, மற்றும் புதிய பைபிளில்

எபே 5.22 இல் "மனைவிகளே, கர்த்தருக்கு கீழ்ப் படிகிறது போல, உங்கள் சொந்தப் புருஷருக்கும் கீழ்ப்படியுங்கள்."

எபே 5.23 இல், "கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான். அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்."

எபே 5.24 இல், "ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்த புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்."

எபே 5.33 இல,; ஷஷ...மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவன்."

என்று கிறிஸ்தவம் பெண்ணை பக்தியின் பின்னால் கிறிஸ்துவின் வசனங்கள் ஊடாக கோருவதன் மூலம், தனது சுதந்திரம் தனது உரிமையை ஆணுக்காக இழக்க கோருகின்றது. ஏன் பெண் ஆணுக்கு கீழ்படிந்து, மதித்து, பயபக்தியாக பெண் நடந்து கொள்ள வேண்டும்?. இதை பெண்ணுக்கு ஆண் ஏன் செய்யக் கூடாது. இருக்கும் ஆணாதிக்க தனிச் சொத்துரிமைக்குள், கிறிஸ்தவ மதம் ஆணாதிக்கத்தை பிரதிபலித்தே உருவாகியதைக் காட்டுகின்றது.

ஆணாதிக்க யதார்த்தம் மீது, கற்பனையான கடவுள் என்ற கருத்துமுதல்வாத கோட்பாட்டால் இறுக்கியதன் மூலம், பொருள்முதல்வாதமான யதார்த்த பெண்ணின் போராட்டத்தை மட்டுப்படுத்தமுடிந்தது, சிதைக்கமுடிந்தது.

கடவுளின் பெயரில் பெண்ணை அடங்கி நடக்க கோரியதன் மூலம், பெண்ணின் போராட்டத்தை பக்தியாக்கி ஆணாதிக்க வன்முறையை சீர்திருத்தமுடிந்தது. கடவுளின் பெயரில் நம்பிக்கையை உருவாக்கி, பெண்ணை அடிமையாக இயல்பில் வளர்த்தெடுத்ததன் மூலம், ஆணாதிக்க வன்முறை மட்டுப்படுத்தப்பட்டது. இந்த பக்தியை, நம்பிக்கையை, அடிமைத்தனத்தை மீறும் போது கொடூரமான ஒழுக்க மீறலாக சித்தரித்து வன்முறையை ஏவியது.

ஆண் பெண் பரஸ்பரம் மதிப்பும் மரியாதையையும் கொண்டு வாழ்வதை மறுத்த மதம், பெண்ணை ஆணுக்கு அடங்கி சேவகம் செய்ய நிர்ப்பந்தித்தது. தலைவனின் ஆணாதிக்கத்தை மதித்து, கீழ்ப்படிந்து, பயபக்தியாக அடங்கி நடக்க கோருவதே கிறிஸ்தவ செய்தியாகும்.

கடவுளுக்கு ஒருவன் எப்படி அடிமையாக பயத்தால் தனது நலன் கோரி வழிபடுகின்றானோ, அதேபோல் பெண் கணவனிடம் பயத்தால் அதிகாரப் படிநிலையை சொத்துரிமையால் மதிக்கின்றானோ, அதை கடவுளின் சித்தமாக்குவதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றாள். பெண்ணின் உடல், அவளின் செயல்கள் எல்லாம் ஆணுக்கு உட்பட்டவையே, அதை மீறுவது குற்றமாக உள்ளது. ஆணை மேவிய செயல், வார்த்தை, கோரிக்கை கிறிஸ்த்தவத்துக்கு எதிரானது. அதாவது, இன்று மனிதர்களின் ஜனநாயகம் பற்றிய பார்வையில் பெண் தனது ஜனநாயகத்தை கோரும் வரலாற்றில், பைபிள் படிப்பு ஊடாக முரண்பட்ட அனைத்து பழைய, புதிய மதப்பிரிவுகள் கோருவது, பைபிள் ஆணாதிக்க விளக்கத்தையும் கட்டிக்காப்பதற்கே.
-----------------------------------------------------------

No comments: