தமிழ் அரங்கம்

Thursday, September 29, 2005

விபச்சாரத்துக்கு பிரபானிசியம்

வழங்கும் மரணதண்டனை

37வயதுடைய சாந்தி என்றழைக்கப்படும் லீலாவதி ஜெயராசா என்னும் நான்கு குழந்தைகளின் தாயொருவர் யாழ்குடா நாட்டில் சமூகச் சீராழிவில் ஈடுபட்டதாக கூறி சுட்டுக்கொல்லப்பட்டார். குறிப்பாக இந்த பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி இக் கொலை நியாயப்படுத்தப்பட்டது.

இங்கு அடிப்படையான கேள்வியே, விபச்சாரத்தில் ஈடுபடுவர்களுக்கு மரணதண்டனைத் தான் தீர்வா! இதைத் தான் புலித் தேசிய பிரபானிசியம் வழிகாட்டுகின்றாதா? ஓரு பெண் விபச்சாரத்தில் ஈடுபடுவதற்கான அடிப்படையான சமூக காரணங்களை கேள்விக்கு உட்படுத்த மறுக்கும் மரணதண்டனைகளே வக்கிரமானவை.

விபச்சாரம் என்பது பிரபானிசியம் கருதுவது போல் பெண்ணின் தெரிவல்ல. மாறாக பிரபானிசியம் பாதுகாக்கும் ஆணாதிக்க சமூக அமைப்பினால் திணிக்கப்பட்டவை தான். இந்த சமூக அமைப்பில் ஒரு பெண் சுயதீனமாக வாழமுடியாத வறுமையும், சமூக நெருகடியும் ஒரு பெண்ணை விபச்சாரம் செய்ய நிர்பந்திக்கும் சமூக காரணங்களில் முக்கியமானவை. இதைத் தீர்க்க வக்கற்ற மாமனிதர்கள், மரணதண்டனையை வழங்குவதன் மூலம் இதை ஒழித்துக்கட்டலாம் என்று பிரபானிசியம் பீற்றுகின்றனர். தாய்யை கொன்றவர்கள், அந்த தாயின் நாலு குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் வாழ்வதற்கு என்ன வழியை பிரபானிசியம் வைத்துள்ளது. அவர்கள் குழந்தை பாலியல் தொழிலுக்கு போவதைத் தவிர வேறு மார்க்கம் எதையும் தேசியம் வழிகாட்டவில்லை.

மரணதண்டனை தான் ஒரு சரியான சமூகத் தீர்வென்றால், விபச்சாரத்தை விட்டால் வேறு வாழ்வு இல்லையென்ற நிலையில் உலகில் வாழும் கோடிக்காணக்கான பெண்களுக்கு பிரபானிசியம் மரணதண்டனையைத் தான் வழங்கவிரும்புகிறது.

மௌனமாக பலரும் பேசமறுத்த இக்கொலைக்கு பின்னால் உள்ள அரசியலும், மௌனமும் மிகவும் கேவலமானது.

---------------------------------------------------------------------

No comments: