தமிழ் அரங்கம்

Monday, June 16, 2008

பாசிசத்தை எதிர்க்காத 'தொழில் நேர்மை"

மனித அவலத்தையே சமூகமாக்கிவிட்ட பாசிசத்தை, எதிர்க்காத ஒரு ஊடகவியலை 'தொழில் நேர்மை" என்ற பெயரில் நடத்துவதே பாசிசம் தான். பாசிசத்தை இப்படியும் அரங்கேற்ற முடியும் என்பது, பொறுக்கிகளினதும் கிரிமினல்களினதும் வக்கிரமாகும். புலி - புலியெதிர்ப்பு பாசிட்டுகளுடன் கூடி, நடத்துகின்ற அரசியல் விபச்சாரம் தான், அவரின் 'தொழில் நேர்மை" யாகின்றது.

இந்த தேசம்நெற்றுக்கு என்று எந்த சமுதாய நோக்கமும் கிடையாது. இதை நடத்தும் ஜெயபாலனோ, மனிதாபிமானமற்ற ஒரு பாசிச வியாபாரி. 'தொழில் நேர்மை" பேசும் வண்ணம், பாசிசம் பெற்றெடுத்த ஒரு பொறுக்கி. இதற்குள் சில வலது இடது பேசும் தரகர்கள். தனது சொந்த வியாபாரத்தைச் செய்ய, இடதுசாரியம் முதல் வலதுசாரியம் வரை, இவருக்கு தேவைப்பட்டது, தேவைப்படுகின்றது. அன்று முதல் இன்றுவரை அவன் செய்ததும், செய்து வருவதும் இதைத்தான். இதை புரிந்து கொண்ட சிலர், இதில் இருந்தே விலகிவிட்டனர்.

இந்த பொறுக்கியுடன் யாரெல்லாம் சேர்ந்து பொறுக்க முடியுமோ, அவர்கள் கூடுகின்றனர். முன்பு தேசம் பத்திரிகையில் இருந்தவர்கள் ஏன் விலகினர் என்று ஆராயாது, பொறுக்கியுடன் சேர்ந்து வலதுகள் இடதுகள் தத்தம் பங்குக்கு பொறுக்க முனைகின்றனர்.

இங்கு அரசியல் பேசாத தேசத்தின் 'தொழில் நேர்மை" என்பது, அரசியல் அவதூறாக அரசியலைக் கட்டமைப்பதாகும். மக்களின் விடுதலைக்கான எந்த சமூகக் கூறும் வளர்ந்துவிடக் கூடாது என்பதே, இதன் அரசியல் இலக்காகும்;. அரசியல் பேசாத இந்தத் தேசம் தான், 'இரயாகரன் - அவரது புனைவுகளும் அவர் கட்டமைக்கும் விம்பமும்" என்ற கட்டுரை ஊடாக, தனது அரசியல் முகத்தையும் இலக்கையும் வெளிக் காட்டியது.

இங்கு இதன் மூலம் இரண்டு விடையங்களை தேசம் அரங்கேற்றிக் காட்டியது.
.

No comments: