தமிழ் அரங்கம்

Friday, June 20, 2008

தேசத்தில் தஞ்சமடைந்துள்ள பொறுக்கிகள் யார்?

மக்கள் விடுதலையை மறுக்கின்றவர்களை பெரும்பான்மையாக கொண்ட, சமூக விரோதிகளாலானது. சொந்த நடத்தைகளாலும், கருத்தாலும் மனித இனத்தையே வேரோடு அழிக்கின்றவர்கள் தான் இவர்கள்.

மிகக் கணிசமான புலி ஓட்டுண்ணிகள், இதற்குள் பல பெயர்களில் ஓட்டிக் கொண்டு இதற்குள்ளும் வாழப்பழகிவிட்டார்கள். அது செய்வது திடட்மிட்ட வகையில், புலிப்பாசிசத்தை பாதுகாக்க, புலியெதிர்ப்பு கும்பலின் மக்கள் விரோத அரசியலை தனக்கு சார்பாக பயன்படுத்திக்கொள்கின்றது. மக்கள் விடுதலை என்ற கருத்துக்கு எதிராக, புலியும் – புலியெதிர்ப்பும் கூட்டணி அமைத்துக் கொண்டு ஒன்றாக கூட்டாக சேறடிக்க முனைகின்றது. அத்துடன் புலியெதிர்ப்பு தனிநபர் உள் முரண்பாடுகளை ஊதிப் பெருக்கி மோதவைக்கின்றது.

இணையங்களின் (தமிழ்மணம், யாழ் இணையம்… ) புலி சார்பாக எழுதிக்கொண்ட பலர், தேசத்தின் நிலையெடுத்து குந்தியிருந்தே பாசிசப் பிரச்சாரம் செய்கின்றனர். புனை பெயரில் உள்ள பலர், முன்பு சொந்த பெயரில் புனை பெயரில் புலியாக அசல் பாசிட்டாக அம்பலமானவர்கள்;. தம்மை மூடிமறைத்துக் கொண்டு தான், அம்மணமாகி நிற்கின்றனர்.

சமூக நோக்கமற்ற தேசத்தின் 'தொழில் நேர்மை" போல், புலிகள் தமது 'பாசிசத்தின் நேர்மையை" தேசத்தின் துணையுடன் வியாபாரம் செய்கின்றனர். தேசத்தின் 'தொழில் நேர்மை"க்கு ஏற்ப, பாய் விரித்து தானும் விபச்சாரம் செய்கின்றது.

இதில் இரண்டாவது வகையினர் புலியை எதிர்த்தால் முற்போக்கு என்றும், அது தான் இடதுசாரியம் என்றும் ஊர் உலகத்தையே ஏமாற்றும் கடைந்தெடுத்த ஏமாற்றுப் பேர்வழிகள். இதில் புலியெதிர்ப்பு என்றால் அரசை ஆதரிப்பது, மறுபகுதி புலி எதிர்ப்பு என்றால் தமது சொந்த சமூகச் சீரழிவுக்கு ஏற்ப கோஸ்டி கட்டி அதை மோதலாக்குகின்ற கும்பல். இவர்கள் தான் தேசத்தில் தஞ்சமடைந்து விட, அது அவதூறாக காழ்ப்பாக வெளிப்படுகின்றது.
இதற்கு ஏற்ப தேசம் இயங்குகின்றது. புலியெதிர்ப்பு அரச பாசிட்டுகள் இன்றி எப்படி இலக்கிய சந்திப்பு நடத்த முடியாதோ, அப்படி தேசம் அரசு மற்றும் புலிப் பாசிட்டுகள் இன்றி தேச 'ஊடகவியலை" நடத்த முடியாது. இது தான், அதன் 'ஊடகவியல்" அறம்.

மக்களின் விடுதலைக்காக நீங்கள் எதை முன் வைக்கின்றீர்கள், எப்படித் தான் அவர்கள் விடுதலையை அடைய முடியும் என்றால், இதில் உள்ள எந்தப் பொறுக்கியும் பதில் ..கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: