தமிழ் அரங்கம்

Monday, July 21, 2008

பணம் அலுக்கவில்லை பகட்டு அலுத்துவிட்டது - குபேர வர்க்கத்தின் இரகசியச் செல்வம்

ஸாவின் எனும் மேட்டுக்குடி ஓட்டல் நிறுவன முதலாளி, ""இது உடைமை உணர்ச்சிக்கு மாறாக இருத்தலின் உணர்ச்சியாகும்'' எனத் தெரிவிக்கிறார். இவ்வாறு பஞ்சு மெத்தையில் புரண்டவாறு இருத்தலை தேடியலைந்து, யதார்த்த உலகத்தில் கிடைக்காததாலோ என்னவோ, "இரண்டாம் வாழ்க்கை' எனும் இணையதள விளையாட்டில் மேட்டுக்குடியினர் இறங்குகிறார்கள்.

செயற்கையான உலகமான இந்த விளையாட்டில், அந்த உலகத்திற்கென தனி நாணயம் உள்ளது. அங்கே நகைகள், ஆடைகள், அணிகலன்கள், அசையாச் சொத்துக்கள் என எல்லாப் பொருட்களையும் வாங்கவோ, விற்கவோ முடியும். அந்த இணையத் தளத்தில் அவர்களது ரசனைக்கேற்ற பொருட்களை நிறுவனங்கள் விளம்பரப் படுத்துகின்றன; காட்சிக்கு வைக்கின்றன. இந்த செயற்கை நுகர்வு உலகத்தில் அவர்களது இருத்தலின் தேடல் தொடர்கிறது.

நடுத்தர வர்க்கத்தை "உட்கார்–வாயை மூடு, வாங்கு' எனக் கட்டளையிடுகிறது நுகர்வுத் தொழில். விளம்பரங்களின் வழியாக நுகர்பொருட்களால் கட்டமைக்கப்பட்ட ஆளுமைகளை முன்வைத்து செயற்கைத் தேவைகளை உருவாக்குகிறது. ஆனால், சொத்து சேரச் சேர நுகர்பொருளை மென்மேலும் சொந்தமாக்கிக் கொள்வது தனது ஆளுமையை அடையாளம் காண்பது என்ற நிலை அவர்களுக்கு அலுப்பூட்டுகிறது. எனவே, தனக்கான பிரத்தியேகமான நுகர்பொருளைத் தேடும் ரசனையை நோக்கித் தாவுகிறது கோடீசுவர வர்க்கம்... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: