தமிழ் அரங்கம்

Tuesday, March 10, 2009

பரிஸ்சில் நடந்த சுயவிளம்பரப் போராட்டம்

தமிழ்மக்களின் பெயரில், தமிழ் மக்களிள் உரிமைப்போரை கொச்சைப்படுத்தி நடத்திய சுயவிளம்பரப் போராட்டம். ஏதோ வன்முறையாம்! அதுவும் இலங்கையில்! சரி உங்களில் யாருக்காவது தெரியுமா! இப்படி தெரியாத சிலதுகள், சுயவிளம்பரத்துக்காக நடத்திய போராட்டம்; தான் பாரிஸ் போராட்டம். தடிக்கும் நோகாது, பாம்பை அடிக்கும் சுயவிளம்பரக் கோசங்கள்.

தமிழ்மக்கள் சாவா, வாழ்வா என்ற எல்லைக்குள் நாதியற்று கிடக்க, புளட்டின் 'சதி" அரசியலை, மீண்டும் புளட் அல்லாத தளத்தில் அசோக் என்பவர் மேடையேற்ற முனைந்தார்.

இதற்கு சுழியோடிப் பிடித்த நபர் தான் றமணன். றமணன் இங்கு உள்ள அனார்க்கிஸ்ட்டுகள் மற்றும் ரொக்கிஸ்ட்டுகளுடன் கொண்டிருந்த செயல்பாட்டை பயன்படுத்தி, தன் சொந்த சதிக்கூத்தை அதற்குள் அசோக் அரங்கேற்ற முனைந்தார்.

இதற்கு அமைய பயன்படுத்தப்பட்ட அனார்க்கிஸ்ட்டுகள் மற்றும் ரொக்கிஸ்ட்டுகள் கூட, சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்வதில்லை. இப்படி பேரினவாத தேசியத்துக்கு உதவும் அவர்களின் சொந்த அரசியல் மனப்பாங்கை, தம் சொந்த சதி மனப்பாங்குடன் இணைத்து, அரங்கேற்றிய நாடகம் தான் இந்த அர்த்தமற்ற பாரிஸ் போராட்டம்.

தமிழ் மக்களை இன்று சிங்களப் பேரினவாதம் கொன்று குவிக்கின்றது. ஒரு இன அழிப்பாக, இனச் சுத்திகரிப்பாக, இனக்களையெடுப்பாக, அதைச்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: