தமிழ் அரங்கம்

Monday, March 9, 2009

சின்னச் சின்னப் ''பார்வை"கள்....

எப்பவோ கேட்ட குரல்
தமிழீழ ஆயுதப் போராட்டத்திற்கு முற்றட்ட 30 வருட காலமாக, வகுப்புவாத தமிழ்ப் பாராளுமன்ற அரசியற் கட்சிகள் என்ன சொன்னார்கள்: பாராளுமன்ற அரசியல் மூலம் எல்லவற்றையும் "கேட்டுப் பெறலாம்" என்றார்கள்.

தமிழீழ ஆயுதப் போராட்டத்திற்கு பிற்பட்ட 30 வருட காலமான இன்று, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து விட்டதாகக் கூறிக்கொள்ளும் பாராளுமன்ற அரசியல் கட்சிகள் என்ன சொல்கிறார்கள்: "சோறும், சுதந்திரமும் பேசித்தான் பெறவேண்டிய நிலை" என்கிறார்கள்.

முன்னவர் கூறியதில் (கேட்டுப் பெற-லாம்) ஒரு நம்பிக்கை தொனி இருந்தது. பின்னவர் கூறுவதில், (பேசித்-தான்) ஒரு இழுவை இருக்கிறது. இதற்குள் இன்னொரு அரசியல் தொக்க வைக்கப்பட்டுள்ளது. அதுதான் - இவை அனைத்துக்கும் காரணம் புலி என்கின்ற அரசியல்.

கேட்டுப் பெறலாம் என்பது சரிவராது என்றுதான் பின்னவர்கள் ஆயுதம் துாக்கினார்கள். மீண்டும் அதே கதிரைகளுக்கு இவர்கள் வரும்போது, காரணம் சொல்ல, புலிகளை இதற்குள் வலுக்கட்டாயமாக இழுக்கிறார்கள். இப்பினும் இடைக்காலகட்டத்தில் இவர்கள் நடத்தியது "சுதந்திர விடுதலைப் போராட்டமாம்". உங்களுக்கு ஏதாவது விளங்குகிறதா?
இதில் ஏதாவது உப்புச்சப்பு இருக்கிறதா?

சுதந்திரப்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: