தமிழ் அரங்கம்

Wednesday, March 11, 2009

நாம் புலிகளிடம் கோரிய ஜனநாயகம் போராடுவதற்கே ஒழிய, போராட்டத்தை குழிபறிப்பதற்கல்ல

தமிழ்மக்களின் போராட்டத்தை குழிபறிப்பதற்கே ஜனநாயகம் என்கின்றனர், அரசும் அரசு சார்ந்த புலியெதிர்ப்பு புல்லுருவிகளும். இதை புலியின் பெயரால் நியாயப்படுத்துகின்றனர். இப்படி புலிகள் மறுத்த ஜனநாயகமும், மக்கள் விரோதிகள் வழங்கும் 'ஜனநாயகமும்" மக்களுக்கு விரோதமாகியுள்ளது. மக்களின் உரிமையை மறுப்பதற்கே, இன்று 'ஜனநாயகமும்" உச்சரிக்கப்படுகின்றது.

சிங்களப் பேரினவாதமும், இதைச் சார்ந்த புலியெதிர்ப்புவாதிகளும், எப்போதும் புலிகளை முன்னிறுத்தி, புலிகள் தமிழ்மக்களுக்கு மறுத்த 'ஜனநாயகத்தை" வழங்கப்போவதாக கூறினர், கூறுகின்றனர். சரி அந்த 'ஜனநாயகம்" தான் என்ன? என்று கேட்டால், ஆளைக் காணோம் பதிலையும் காணோம் என்று ஓடுகின்றனர்.

சரி, புலிகள் தமிழ்மக்களுக்கு மறுத்த ஜனநாயகம் என்ன? தமிழ்மக்கள் தமக்காக தாம் போராடக் கூடாது என்பதைத்தான் புலிகள் தமிழ்மக்களுக்கு மறுத்தனர். சிங்களப் பேரினவாதத்தை கூட, யாரும் எதிர்த்துப் போராடக் கூடாது என்பதுதான், புலியின் அடிப்படையான ஜனநாயக...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: