தமிழ் அரங்கம்

Thursday, March 12, 2009

கருணாவும் – பிள்ளையானும் 'ஜனநாயகத்துக்கு" திரும்பிய கதை

இதை எப்படி நான் என் வாயால் சொல்வேன். இரண்டு கொலைகாரர்களின் அரசியல் சூதையும், சதியையும் சொல்வதா! தமிழ் மக்களுக்கு குழிபறித்த கைக் கூலித்தனத்தைச் சொல்வதா! கிழக்கு மக்கள் மத்தியில், வடக்கு மக்களுக்கு எதிரான நஞ்;சை ஊட்டிய கதையைச் சொல்வதா! இதையெல்லாம் எதற்காகத் தான், இவர்கள் செய்தார்கள்! மக்களுக்காகவா!?

'ஜனநாயகத்துக்கு" திரும்பியதாக கூறுகின்றனரே, இவர்களால் மக்களுக்கு என்ன ஜனநாயகம் கிடைத்துவிட்டது. இவர்கள் 'ஜனநாயகத்துக்கு" திரும்ப முன், அப்படி 'ஜனநாயக" விரோதமாக என்னதான் செய்தனர்? அதையாவது சொல்லுங்கள். ஆயுதம் ஓப்படைக்க முன், ஆயுதத்தை ஓப்படைத்த பின், கருணா சுதந்திரக் கட்சியில் சேர முன், சேர்ந்த பின், இந்த 'ஜனநாயகத்தின்" அருமை பெருமைகளை எல்லாம் மக்களுக்கு சொல்லவேண்டியது தானே.

எந்த கொள்கையும் கோட்பாடுமற்ற இரண்டு சுயநல பொறுக்கிகளின் 'ஜனநாயக"க் கதையிது. கைக் கூலித்தனத்தை மூலதனமாகக் கொண்டு, படுகொலைகளை ஏணியாகக் கொண்டு, அதிகாரத்தை தக்கவைத்த கதையிது. இந்த தனிமனித அதிகார வெறி, படுகொலைகளாகி தொடர்ந்தன, தொடர்கின்றது. இதன் இன்றைய அத்தியாயம் தான் ஆயுத ஓப்படைப்பு முதல் பேரினவாத சுதந்திர............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: