தமிழ் அரங்கம்

Wednesday, April 1, 2009

அமைப்புசாராத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்புச் சட்டம்: கானல் நீர் தாகம் தீர்க்காது!

தேர்தலைக் குறிவைத்து நிறைவேற்றப்பட்ட சமூகப் பாதுகாப்புச் சட்டத்தால் எந்தப் பயனும் இல்லை. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்காக ஏழைகூலித் தொழிலாளர்கள் வேலை தேடி பெருநகரங்களை நோக்கி நகர்கின்றனர். மொழி, மாநில எல்லைகளை எல்லாம் கடந்து வாழ்க்கை அவர்களைப் பெயர்த்து எறிகின்றது.

குறிப்பாக பீகார், ஒரிசா, உத்திரபிரதேசம் ஆந்திரா மாநிலங்களிலிருந்து சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற நகரங்களுக்குக் கூலி வேலை செய்ய வருகிறார்கள். இதேபோல தமிழகத்தில் இருந்தும் புலம் பெயர்ந்து பெங்களூரு, மும்பை, கேரளம் போன்ற இடங்களுக்குப் போகிறார்கள். அமைப்பு சாராத தொழிலாளர்களாக வகைப்படுத்தப்படும் இவர்களுக்குக் கிடைக்கும் வேலையோ நிரந்தரம் இல்லாதது.

No comments: