தமிழ் அரங்கம்

Saturday, May 16, 2009

அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் : வினை விதைத்தவன் தினை அறுக்க முடியுமா?

ஆப்கானில் அமெரிக்கா நடத்தி வரும் தீவிரவாதத்துக்கு எதிரான போர் பலமுனைகளிலும் தோல்வியைத் தழுவி வருகிறது. அப்போர் தொடங்கி ஏழு ஆண்டுகளுக்கு மேலான பிறகும், அல் காய்தா தலைவர் ஓசாமா பின்லேடனை அமெரிக்காவால் பிடிக்க முடியவில்லை. அல் காய்தா, தாலிபான் ஆகிய இசுலாமிய தீவிரவாத அமைப்புகளை அமெரிக்காவால் முற்றிலுமாக அழித்தொழிக்க முடியவில்லை என்பது ஒருபுறமிருக்க, ஆப்கானின் அண்டை நாடான பாகிஸ்தானையும் ஆட்டங்காணச் செய்துவிடும் அளவிற்கு அவ்வமைப்புகளின் செயல்பாடுகள் வளர்ந்து வருகின்றன.

அமெரிக்கா, ஆப்கானில் கர்சாய் என்பவர் தலைமையில் நிறுவியுள்ள பொம்மை அரசாங்கத்தின் அதிகாரம், அந்நாட்டின் தலைநகர் காபூலைத் தாண்டினால் செல்லாக்காசுதான் எனுமளவிற்கு முடங்கிப் போய்க் கடக்கிறது. இன்னொரு புறமோ, தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற கதையாக, ஆப்கானிலும், ஆப்கான் எல்லையையொட்டியுள்ள பாகிஸ்தான் பகுதியிலும் தாலிபான் என்ற பெயரை வைத்துக்கொண்டு இயங்கி வரும் பல்வேறு இசுலாமிய தீவிரவாதக் குழுக்கள் ஆங்காங்கே குட்டி சமஸ்தானங்களை நடத்தி வருகின்றன. இந்த யுத்தப் பிரபுக்களை அழிப்பதற்காக அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தும் வான்வழித் தாக்குதல்களிலும், தரைவழித் தாக்குதல்களிலும் அப்பாவி மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்து வருகின்றனர்.

தனது தேர்தல் பிர
...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: