தமிழ் அரங்கம்

Thursday, January 28, 2010

சிறுபான்மை மக்களின் எதிர்ப்பு அரசியலும், பிற்போக்கு சக்திகளும்

புலம்பெயர் நாட்டில் புலி – புலியெதிர்ப்பு அரசியலாக, அது சரத் - மகிந்தாவுக்கு பின் செல்லும் அரசியலாக, ஆய்வாக, சிந்தனையாக மாறுகின்றது. மகிந்தா வெற்றி பெற்ற நிலையில், அதுவே சரணடைவு அரசியலாக மாறுகின்றது. இதற்கு வெளியில் சிந்திக்க செயலாற்ற, எந்த மாற்று சிந்தனையும், அரசியலும் கிடையாது. மாறாக மக்களின் எதார்த்தத்தை நிராகரிக்கின்றதும், தங்கள் குறுக்கிய குதர்க்க விளக்கங்களுடன் அரசியல் பச்சோந்தித்தனத்தையே விதைக்கின்றது.


சிறுபான்மை இனங்கள் எதற்காக இந்த அரசை எதிர்த்து வாக்களித்தனர். அவர்கள் தமிழ் தேசியத்தை கோரியல்ல. புலிகளை ஆதரித்தல்ல. மாறாக தங்கள் மீதான இன ஒடுக்குமுறையை எதிர்த்து வாக்களித்தனர். இதுதானே இன்றைய எதார்த்தம்.

சிறுபான்மையான தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமையை மறுத்து இந்த, அரசு இயங்குகின்றது. பெரும்பான்மை மக்களின்; அரசாக தன்னைக் காட்டி, பெரும்பான்மை மக்களையும் ஒடுக்குகின்றது.

இப்படி சிங்கள இனவாதத்தை சார்ந்த நின்று, சிறுபான்மை மக்கள் மேல் கட்டமைக்கும் பிளவுவாத இனவாத அரசியலை எதிர்த்துதான், சிறுபான்மை மக்கள் வாக்களித்தனர். இது தானே உண்மை.

சிறுபான்மை ...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: