தமிழ் அரங்கம்

Sunday, January 24, 2010

நாட்டு மக்கள் மீதான போர்தான் இந்த நக்சல் ஒழிப்புப் போர்

"ஆபரேசன் கிரீன் ஹண்ட்' (காட்டு வேட்டை) என்ற பெயரில் மாவோயிஸ்டு கட்சியையும், நக்சல்பாரி இயக்கத்தையும் நசுக்கி ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது. சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களிலும் மகாராட்டிரம், ம.பி, ஆந்திர மாநிலங்களின் எல்லைப்புறங்களிலும் பரவியிருக்கும் தண்டகாரண்யா காடுகளிலிருந்தும் மாவோயிஸ்டு கொரில்லாக்களை ஒழித்துக்கட்டுவதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அறிவித்திருக்கிறார், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.


சுமார் ஒரு லட்சம் போலீசு மற்றும் துணை இராணுவப் படையினருடன் சல்வாஜுடும், ஹர்மத் வாகினி, நாகிரிக் சுரக்சா சமிதி, சன்லிட் சேனை முதலான அரசு ஆதரவு பெற்ற கூலிப் படைகளும் மாவோயிஸ்டுகளுக்கும் பழங்குடி மக்களுக்கும் எதிராகக் களத்தில் நிற்கின்றன. ""இராணுவம் நேரடியாகக் களத்தில் இறங்காது'' என்று கூறிக் கொண்டே சொந்த நாட்டின் மக்களுக்கு எதிராக, இந்த மண்ணின் பூர்வீகக் குடிகளுக்கு எதிராக ரூ. 7,300 கோடி நிதி ஒதுக்கி, இராணுவ ஹெலிகாப்டர்கள் துணையுடன், இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்தப் போர் நடத்தப்படுகிறது. சிப்பாய்களுக்கு கொரில்லா எதிர்ப்பு இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆயுதப் படைகளின் அட்டூழியங்களையும் அத்துமீறல்களையும் வெளிக்கொண்டு வரும் பத்திரிக்கையாளர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் நசுக்குவதற்கென்றே எல்லா வகையான ஆள் தூக்கிக் கருப்புச் சட்டங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. ""இலங்கை இராணுவத்தின் இறுதிப்போர்தான் எங்களுக்கு வழிகாட்டி'' என்று வக்கிரமாகப் பிரகடனம் செய்திருக்கிறார், சட்டிஸ்கர் மாநில டி.ஜி.பி விசுவரஞ்சன்.

இந்தப் போர்வெறிக்குள் புதைந்திருக்கும் இரகசியம் இதுதான்: தண்டகாரண்யாவின் காடுகளிலும் மலைகளிலும் அற்புதமான அரிய .....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: