தமிழ் அரங்கம்

Tuesday, May 20, 2008

பசுவின் புனிதம் : ஒட்டுப் பொறுக்கும் தந்திரம்

இந்து மதவெறியர்கள் எங்கெல்லாம் காலூன்றத் திட்டமிடுகிறார்களோ அங்குள்ள சிறுபான்மையினரை வம்புக்கிழுத்துத் தகராறை உருவாக்குவதற்காகப் பல உத்திகளைக் கையாளுகின்றனர். உள்ளூர் மசூதியில் வம்படியாகக் காவிக்கொடி ஏற்றுவது, பாகிஸ்தான் கொடியை பள்ளிவாசலில் ஏற்றி உள்ளனர் என்று வதந்தியைப் பரப்புவது, பாகிஸ்தான் அணி கிரிக்கெட்டில் வெற்றி பெறும்போது இங்குள்ள முசுலீம்கள் வெடி வெடிக்கிறார்கள் என்று புரளி கிளப்புவது இப்படிப் பல உத்திகளைக் கையாண்டு மக்களை மதரீதியில் பிளந்து கலவரத்தின் மூலம் வேரூன்றுவது என்பதைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இவர்களின் சதிச்செயல்களில் ஒன்றுதான், "இந்துக்கள் தெய்வமாக வணங்கும் கோமாதாவை (!) முசுலீம்கள் உயிரோடு தோலை உரித்துக் கொல்கின்றனர்' என்று வதந்தியைப் பரப்பி இந்துக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி, கலவரத்தை உருவாக்குவது. விரைவில் தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகத்தில், கோமாதா கொல்லப்படுவதாக பொய்ப் பிரச்சாரத்தை இந்துவெறியர்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி, கர்நாடக மாநிலத்தின் சிக்மகளூர் மாவட்டம், சாந்திபுரா பகுதியில், ஒரு பசு மாட்டைக் கொன்றதற்காக பஜ்ரங் தள் வெறியர்கள் ஜெயராம் என்ற ஒரு தலித்தையும், இரண்டு முசுலீம்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். 500 பேர் முன்னிலையில் சுமார் இரண்டு மணி நேரம் அவர்களை அடித்துப் படுகாயப்படுத்தியதுடன், அவர்களை நிர்வாணப்படுத்தி, மாட்டிறைச்சியைத் தலையில் வைத்து ஊர்வலமாக இழுத்து வந்துள்ளனர்.

No comments: